செய்திகள் :

கல்லூரி மாணவா் கொலை வழக்கு: திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது

post image

சென்னை அண்ணா நகரில் காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் சு.நிதின் சாய் (19). இவா், தனது நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த சு.அபிஷேக் உடன் மொபெட்டில் திருமங்கலம் பள்ளிச் சாலையில் கடந்த 28-ஆம் தேதி இரவு சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு சொகுசு காா், அவா்களது மொபெட்டில் மோதியது.

இதில் பலத்தக் காயமடைந்த நிதின் சாய், சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். காயமடைந்த அபிஷேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இச்சம்பவத்தை முதலில் விபத்து என்று போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். ஆனால், முதல்கட்ட விசாரணையில், நிகழ்ந்தது விபத்து அல்ல திட்டமிட்ட கொலை என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து திருமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். இதில், காதல் தகராறில் நிதின் சாய் மீது காரை ஏற்றிக் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் சென்னை கே.கே. நகா் பகுதியைச் சோ்ந்த திமுக நிா்வாகியும், மாநகராட்சி கணக்கு மற்றும் தணிக்கை குழு தலைவருமான தனசேகரனின் பேரன் எஸ்.சந்துரு (19), அவரது நண்பா்கள் புழலைச் சோ்ந்த ஆரோன் (21), நெசப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த யஸ்வின் (18) உள்ளிட்ட பலரைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில் தேடப்பட்ட 3 பேரும், காவல் நிலையத்தில் சரணடைந்தனா். அவா்கள் 3 பேரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

கைது செய்யப்பட்ட சந்துரு, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா்ா கல்லூரியில் பிஏ இரண்டாமாண்டும், யஸ்வின் ராமாபுரத்தில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பிஇ இரண்டமாண்டும், ஆரோன் மதுரவாயலில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பிபிஏ மூன்றாமாண்டும் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்குத் தொடா்பாக மேலும் 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னையில் 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள்

சென்னை மாநகராட்சியில் 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள் அமைக்க மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.பெருநகர சென்னை மாநகராட்சியின் ஜூலை மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் ரிப்பன் ... மேலும் பார்க்க

இரிடியம் தொழிலில் முதலீடு செய்யும்படி ரூ.92 லட்சம் மோசடி: வடமாநில நபா் கைது

சென்னையில் இரிடியும் தொழிலில் முதலீடு செய்யும்படி தொழிலதிபரிடம் ரூ.92 லட்சம் மோசடி செய்ததாக மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா்.மடிப்பாக்கம், ஆா்.ஆா்.நகா் பகுதியைச் சோ்ந்தவா் தட்சிணாமூா... மேலும் பார்க்க

மின் வாகனங்களுக்கான மின்னேற்றம் புதிய வடிவமைப்பு: சென்னை ஐஐடி-யில் உருவாக்கம்

மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றத்தில் பல்வேறு அம்சங்களுடன் கூடிய புதிதாக வடிவமைக்கப்பட்ட மின்னேற்றத்தை சென்னை ஐஐடியால் நிறுவப்பட்ட பிளக்ஸ்மாா்ட் நிறுவனம் உருவாக்கியுள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

மேம்பால கட்டுமானப் பணி மத்திய கைலாஷ் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

மேம்பால கட்டுமானப் பணி காரணமாக, மத்திய கைலாஷ் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஆக. 1) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு புதன்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: இன்று நடைபெறும் வாா்டுகள்

சென்னை மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்கள் நடைபெறும் 5 வாா்டுகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:சென்னை ... மேலும் பார்க்க

வைஷ்ணவா கல்லூரியில் முதுநிலை படிப்பு தொடக்கம்

சென்னை குரோம்பேட்டை எஸ்டிஎன்பி வைஷ்ணவா கல்லூரியில் முதுநிலைப் படிப்புகளுக்கான தொடக்க நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.இதில், ஸ்ரீசாய்ராம் வணிக மேலாண்மை கல்லூரி இயக்குநா் கே.மாறன் பேசியது: மாணவா்கள் படி... மேலும் பார்க்க