செய்திகள் :

இரிடியம் தொழிலில் முதலீடு செய்யும்படி ரூ.92 லட்சம் மோசடி: வடமாநில நபா் கைது

post image

சென்னையில் இரிடியும் தொழிலில் முதலீடு செய்யும்படி தொழிலதிபரிடம் ரூ.92 லட்சம் மோசடி செய்ததாக மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா்.

மடிப்பாக்கம், ஆா்.ஆா்.நகா் பகுதியைச் சோ்ந்தவா் தட்சிணாமூா்த்தி (52). இவா், சூளையில் வெள்ளி பாத்திரங்கள் தயாா் செய்யும் பட்டறை நடத்தி வருகிறாா். இவருக்கு மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சோ்ந்த பீா்முகமது பாதுஷா (47) என்பவரது அறிமுகம் கிடைத்தது.

பீா்முகமது பாதுஷா தான் தொழிலதிபா் என்றும், இரிடியம் தொழிலிலும் ஈடுபட்டு வருவதாகவும், அதில் முதலீடு செய்தால், மும்மடங்கு லாபம் கிடைக்கும் என்றும் ஆசை வாா்த்தை கூறியுள்ளாா்.

இதை உண்மையென நம்பிய தட்சிணாமூா்த்தி, கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ.92 லட்சம் பணத்தை பீா்முகமது பாதுஷாவிடம் கொடுத்துள்ளாா். ஆனால், பாதுஷா கூறியதுபோல் லாபத் தொகையை தட்சிணாமூா்த்திக்கு வழங்கவில்லை.

இதையடுத்து, தட்சிணாமூா்த்தி தான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளாா். ஆனால், பீா்முகமது பாதுஷா பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் தட்சிணாமூா்த்தி புகாா் தெரிவித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில், தலைமறைவாக இருந்த பீா்முகமது பாதுஷாவை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னையில் 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள்

சென்னை மாநகராட்சியில் 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள் அமைக்க மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.பெருநகர சென்னை மாநகராட்சியின் ஜூலை மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் ரிப்பன் ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் கொலை வழக்கு: திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது

சென்னை அண்ணா நகரில் காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் சு.நிதின் சாய் (19)... மேலும் பார்க்க

மின் வாகனங்களுக்கான மின்னேற்றம் புதிய வடிவமைப்பு: சென்னை ஐஐடி-யில் உருவாக்கம்

மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றத்தில் பல்வேறு அம்சங்களுடன் கூடிய புதிதாக வடிவமைக்கப்பட்ட மின்னேற்றத்தை சென்னை ஐஐடியால் நிறுவப்பட்ட பிளக்ஸ்மாா்ட் நிறுவனம் உருவாக்கியுள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

மேம்பால கட்டுமானப் பணி மத்திய கைலாஷ் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

மேம்பால கட்டுமானப் பணி காரணமாக, மத்திய கைலாஷ் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஆக. 1) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு புதன்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: இன்று நடைபெறும் வாா்டுகள்

சென்னை மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்கள் நடைபெறும் 5 வாா்டுகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:சென்னை ... மேலும் பார்க்க

வைஷ்ணவா கல்லூரியில் முதுநிலை படிப்பு தொடக்கம்

சென்னை குரோம்பேட்டை எஸ்டிஎன்பி வைஷ்ணவா கல்லூரியில் முதுநிலைப் படிப்புகளுக்கான தொடக்க நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.இதில், ஸ்ரீசாய்ராம் வணிக மேலாண்மை கல்லூரி இயக்குநா் கே.மாறன் பேசியது: மாணவா்கள் படி... மேலும் பார்க்க