செய்திகள் :

சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை ரத்தாகுமா? மான் வேட்டை வழக்கு மீண்டும் விசாரணை!

post image

சல்மான் கான் மீதான மான் வேட்டை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

கடந்த 1998-ஆம் ஆண்டு சட்டவிரோதமாக மான்களை வேட்டையாடியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கானை குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து, அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜோத்பூர் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்ப்பட்டது. ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் சல்மான் கான் தரப்பிலிருந்தும் ராஜஸ்தான் அரசு தரப்பிலிருந்தும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இத்தனை ஆண்டுகளுக்கு பின் இந்த மனுக்கள் மீதான விசாரணை வரும் செப்டம்பரில் நடத்தப்படுகிறது. செப்டம்பர் 22-ஆம் தேதி இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

மான் வேட்டை வழக்கில் இதுவரை...

கடந்த 1998-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி ராஜஸ்தானின் ஜோத்பூர் பகுதியில் 'ஹம் சாத் சாத் ஹைன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அதில் சல்மான், தபு, நீலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் பல்வேறு காட்சிகள் படமாக்கப்பட்டன.

அன்றைய நாள் இரவில், வனப்பகுதிக்கு அருகே ஜிப்சி வாகனத்தில் சல்மான் உள்ளிட்டோர் சென்றனர். அப்போது அரிய வகை மான்கள் அங்கு உலவிக் கொண்டிருந்தன. அவற்றில் இரண்டு மான்களை சல்மான் கான் வேட்டையாடினார். உடன் சென்ற நட்சத்திரங்களும் அதற்கு உதவியதாகத் தெரிகிறது.


இந்நிலையில், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வனஉயிரினப் பாதுகாப்புச் சட்டம், பிரிவு 9/61-இன் கீழ் சல்மான், சையஃப் அலி கான், தபு, நீலம், சோனாலி, துஷ்யந்த் சிங் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன. அந்த சட்டப் பிரிவின்படி குற்றம் நிரூபணமானால் அதிகபட்சமாக 6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.


ஜோத்பூர் கீழமை நீதிமன்றத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகாலம் இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. 2018 ஏப்ரல் 5-ம் ஆம் தேதி சல்மான் கானை குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து, அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு வருகிறது.

Salman Khan’s appeal against five-year prison sentence in the blackbuck poaching case

நமஸ்தே டிரம்ப், நம் பக்கம் டிரம்ப் என்றீர்களே? இதுதான் அந்த வெகுமதியா? மோடிக்கு கார்கே கேள்வி

புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டையை நிறுத்தியது தான்தான் என டிரம்ப் கூறிவருவது குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மௌன விரதத்தையே கடைப்பிடி... மேலும் பார்க்க

பால்டால் வழியாக அமர்நாத் யாத்திரை தொடக்கம்: இதுவரை 3.93 லட்சம் பேர் தரிசனம்!

பால்டால் பாதை வழியாக அமர்நாத் யாத்திரை செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஜம்முவிலிருந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஜூலை 3-ஆம் தேதி தொடங்... மேலும் பார்க்க

அதானிக்காக இந்திய பொருளாதாரத்தை பாஜக அழித்துவிட்டது! ராகுல்

தொழிலதிபர் அதானிக்காக இந்திய பொருளாதாரத்தை பாஜக அரசு அழித்துவிட்டது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை விமர்சித்துள்ளார்.இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாததால... மேலும் பார்க்க

தெலங்கானாவில் 4 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!

தெலங்கானா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக 4 வழக்குரைஞர்கள் பதவியேற்றுக் கொண்டனர். உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில் தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங் புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு கூடுதல் நீத... மேலும் பார்க்க

ம.பி.யில் 23,000 பெண்கள், சிறுமிகளைக் காணவில்லை!

மத்தியப் பிரதேசத்தில் குறைந்தது ஒரு மாதம் முதல் ஒன்றரை ஆண்டுகளாக சுமார் 23,000 சிறுமிகள் மற்றும் பெண்களைக் காணவில்லை என மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது. மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் மழைக்காலக் கூட... மேலும் பார்க்க

மாலேகான் குண்டு வெடிப்பு: பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை!

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்து மும்பை என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங், முன்... மேலும் பார்க்க