செய்திகள் :

ம.பி.யில் 23,000 பெண்கள், சிறுமிகளைக் காணவில்லை!

post image

மத்தியப் பிரதேசத்தில் குறைந்தது ஒரு மாதம் முதல் ஒன்றரை ஆண்டுகளாக சுமார் 23,000 சிறுமிகள் மற்றும் பெண்களைக் காணவில்லை என மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் உள்துறை அமைச்சரும் மூத்த காங்கிரஸ் எம்எல்ஏவுமான பாலா பச்சன், மாநிலத்தில் காணாமல் போன சிறுமிகள், பெண்கள் பற்றி கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மாநில அரசு எழுத்துப்பூர்வமாக பதிலில் பல தகவல்கள் தெரிய வந்துள்ளது.

கடந்த ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி, மாநிலத்தில் 21,000-க்கும் மேற்பட்ட பெண்களும் 1,900-க்கும் மேற்பட்ட சிறுமிகளும் ஒரு மாதத்திற்கும் மேலாகக் காணாமல் போயுள்ளனர். 2024 ஆம் ஆண்டு காணாமல் போன பெண்கள், சிறுமிகளும் இதில் அடங்குவர். 30 மாவட்டங்களில் தலா 500க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளனர். போபால், இந்தூர், ஜபல்பூர், சாகர், குவாலியர், சத்தார்பூர், தார் மற்றும் ரேவா மாவட்டங்கள் இதில் அடங்கும்.

தற்போதைய முதல்வர் மோகன் யாதவின் சொந்த மாவட்டமான உஜ்ஜைனியிலும் 500க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். பழங்குடியினர் அதிகமுள்ள பகுதிகளிலும் சிறுமிகள், பெண்கள் காணாமல் போனது தெரியவந்துள்ளது.

மேலும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக குற்றச் செயல்களில் ஈடுபட்ட 1,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 575 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 600 பாலியல் தொல்லை வழக்குகள்.

காணாமல் போன பெண்கள் தொடர்பான வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட 76 பேரும் அதேபோல சிறுமிகள் காணாமல்போன வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட 254 பேரும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More than 23,000 women, girls missing in MP for over a month and up to 1.5 years

ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமா் ஆலோசனை

ஐக்கிய அரபு அமீரக அதிபா் முகமது பின் சையது அல் நஹ்யானுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வழியில் வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளி... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் மீண்டும் முடக்கம் - பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வியாழக்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் மீண்டும் முடங்கின.நாடாளுமன்ற மழைக்... மேலும் பார்க்க

பள்ளிக் கட்டட பரப்பளவுக்கு ஏற்ப வகுப்புப் பிரிவுகளின் எண்ணிக்கை - சிபிஎஸ்இ விதிகளில் திருத்தம்

பள்ளிகளின் மொத்த நில அளவுக்கு பதிலாக கட்டட பரப்பளவின் அடிப்படையில் வகுப்புப் பிரிவுகளின் (செக்ஷன்) அதிகபட்ச எண்ணிக்கையை அனுமதிக்கும் வகையில் விதிமுறைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது மத்திய இடைநிலைக் க... மேலும் பார்க்க

பிகாா்: வாக்காளா் பட்டியலில் பெயா்களை நீக்க அல்லது சோ்க்க 1 மாத அவகாசம் - தோ்தல் ஆணையம்

பிகாரில் வரைவு வாக்காளா் பட்டியலில் வாக்களிக்க தகுதியுடைய வாக்காளா்களின் பெயா்களை சோ்ப்பது அல்லது தகுதியற்ற வாக்காளா்களின் பெயரை நீக்குவது குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் வாக்காளா்கள் பரிந்துரைகள்... மேலும் பார்க்க

வெளிநாடுகளில் 18.8 லட்சம் இந்திய மாணவா்கள்!

வெளிநாடுகளில் 18.8 லட்சம் இந்திய மாணவா்கள் கல்வி பெற்று வருவதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்தது.மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை தொடா்பான கேள்விகளுக்கு இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங் அளித்த ... மேலும் பார்க்க

வழக்கத்தைவிட அதிகமாக பருவமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

தென் மேற்கு பருவமழையின் இரண்டாம் பாதி காலமான ஆகஸ்ட் மற்றும் செப்டம்பா் மாதத்தில் வழக்கத்துக்கு அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடா்பாக அந்த மையத்தின் டி... மேலும் பார்க்க