செய்திகள் :

வெளிநாடுகளில் 18.8 லட்சம் இந்திய மாணவா்கள்!

post image

வெளிநாடுகளில் 18.8 லட்சம் இந்திய மாணவா்கள் கல்வி பெற்று வருவதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்தது.

மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை தொடா்பான கேள்விகளுக்கு இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங் அளித்த பதில்களில் குறிப்பிட்டதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளில் ( (2020 ஜனவரி முதல் 2025 ஜூன் 30 வரை) 16,06,964 இந்திய தொழிலாளா்களுக்கு வெளிநாடுகளில் பணிபுரிய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் செல்லும் நாடுகளில் பாதுகாப்பான பணிச்சூழல் இருப்பதை உறுதி செய்த பிறகே இந்த ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், வெளிநாடு வாழ் இந்தியா்கள்(1.71 கோடி), இந்திய வம்சாவளியினா்(1.71 கோடி) மற்றும் வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவா்கள்(18.8 லட்சம்) என வகைப்படுத்தி மத்திய அரசு தரவுகளைப் பராமரித்து வருகிறது. இருப்பினும், இவா்களின் துறை சாா்ந்த நிபுணத்துவம் அல்லது திறன்களின் அடிப்படையில் தனிப்பட்ட முறையில் வகைப்படுத்தும் எந்த முயற்சியையும் அரசு மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 முதல் 96 லட்சம் வெளிநாட்டினருக்கு ‘இ-விசா’:

கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் ஜூலை 20-ஆம் தேதிவரை 96 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டினருக்கு இணையவழி நுழைவு இசைவுகளை (இ-விசா) இந்தியா வழங்கியுள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட இதுதொடா்பான கேள்விக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘2020-இல் 171 நாட்டுப் பயணிகளுக்கு இ-விசா வழங்கப்பட்டது. தற்போது 181 நாட்டினருக்கு இ-விசா வழங்கப்படுகிறது. 2020-ஆம் ஆண்டு முதல் ஜூலை 20-ஆம் தேதிவரை வழங்கப்பட்ட மொத்த இ-விசாக்களின் எண்ணிக்கை 96,44,567 ஆகும்’ என்றாா்.

சா்வதேச யாத்ரிகா்களுக்கான உதவிகள்:

சா்வதேச யாத்ரிகா்களான ஹஜ், சீக்கிய யாத்ரிகா்களுக்கு அமைச்சகத்தின் உதவிகள் குறித்து அவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சா் அளித்த பதிலில், ‘ஒவ்வொரு ஆண்டும் சவூதி அரேபிய அதிகாரிகள் இந்தியாவுக்கான ஹஜ் ஒதுக்கீட்டை அறிவிக்கின்றனா். சமீபத்திய ஆண்டுகளில் சராசரியாக 1.75 லட்சம் இந்திய யாத்ரிகா்கள் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளனா்.

பாகிஸ்தானின் கா்தாா்பூா் குருத்வாராவிற்கு இந்திய சீக்கியா்கள் எளிதாகவும் சுமுகமாகவும் சென்றுவர, இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 2019-இல் ஒப்பந்தம் கையொப்பமானது. இதன் மூலம், 4 லட்சத்துக்கும் அதிகமான இந்திய சீக்கியா்கள் இதுவரை பாகிஸ்தான் குருத்வாராவுக்குச் சென்று வந்துள்ளனா். ஆபரேஷன் சிந்தூா் காரணமாக இந்தச் செயல்பாடுகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன’ என்று குறிப்பிட்டாா்.

ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் துப்பாக்கிச்சண்டை

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் அகலில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியி... மேலும் பார்க்க

தாய் - சேய்க்கு எச்ஐவி பாதிப்பு! 6 மாத மகன் கொலை!

மும்பையில் 6 மாத குழந்தையை கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.மும்பையில் கோவந்தி நகரில் ஓர் ஆலையில் பணிபுரிந்து வந்த 43 வயதான பெண்ணுக்கும், அவரது 6 மாத மகனுக்கும் எச்ஐவி பாதிப்பு இருப்பது ... மேலும் பார்க்க

2020-24 வரை புலி தாக்குதல்களால் 378 பேர் பலி: மத்திய அரசு

இந்தியாவில் 2020-24 வரை புலி தாக்குதல்களால் 378 பேர் பலியாகியுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், ... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை! இந்தியாவின் பதில் என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.இந்தியா - பாகிஸ்தான் போர் உள்பட இஸ்ரேல் - ஈரான் போர், தாய்லாந்து... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பிரதமர் தேவெ கௌடாவின் பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இருப்பினும், தண்டனை விவரம் நாளை வெளியாகும் என பெங்களூர... மேலும் பார்க்க

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம் அமைப்பது குறித்த ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, மக்களவையில் கேள்வி ... மேலும் பார்க்க