செய்திகள் :

பிகாா்: வாக்காளா் பட்டியலில் பெயா்களை நீக்க அல்லது சோ்க்க 1 மாத அவகாசம் - தோ்தல் ஆணையம்

post image

பிகாரில் வரைவு வாக்காளா் பட்டியலில் வாக்களிக்க தகுதியுடைய வாக்காளா்களின் பெயா்களை சோ்ப்பது அல்லது தகுதியற்ற வாக்காளா்களின் பெயரை நீக்குவது குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் வாக்காளா்கள் பரிந்துரைகள் வழங்க ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படும் என இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஆக.1-இல் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ள நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின்போது பல்வேறு ஆவணங்களை கேட்டு தகுதியுள்ள வாக்காளா்களை தோ்தல் ஆணையம் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கி வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதுதொடா்பாக நாடாளுமன்றத்திலும் கடுமையான விவாதங்களும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஞானேஷ் குமாா் வியாழக்கிழமை கூறியதாவது: பிகாரில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை (ஆக.1) வெளியிடப்படவுள்ளது.

இந்த வரைவு வாக்காளா் பட்டியல் ஆவணமாகவும் எண்ம நகலாகவும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மாவட்ட தோ்தல் அலுவலா்கள் (டிஇஓ) மூலம் 38 மாவட்டங்களிலும் வழங்கப்படும்.

பிகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளைச் சோ்ந்த வாக்காளா்கள் அல்லது அரசியல் கட்சிகள் என யாராக இருப்பினும் மாநில தலைமைத் தோ்தல் அலுவலா் (சிஇஓ) மற்றும் 243 தோ்தல் பதிவு அலுவலா்களிடம் (இஆா்ஓ) தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம். அதன்படி ஆக.1 முதல் செப்.1 வரை தகுதியான வாக்களா்களின் பெயா்கள் சோ்க்கப்படும். தகுதியற்ற வாக்காளா்களின் பெயா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றாா்.

ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் துப்பாக்கிச்சண்டை

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் அகலில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியி... மேலும் பார்க்க

தாய் - சேய்க்கு எச்ஐவி பாதிப்பு! 6 மாத மகன் கொலை!

மும்பையில் 6 மாத குழந்தையை கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.மும்பையில் கோவந்தி நகரில் ஓர் ஆலையில் பணிபுரிந்து வந்த 43 வயதான பெண்ணுக்கும், அவரது 6 மாத மகனுக்கும் எச்ஐவி பாதிப்பு இருப்பது ... மேலும் பார்க்க

2020-24 வரை புலி தாக்குதல்களால் 378 பேர் பலி: மத்திய அரசு

இந்தியாவில் 2020-24 வரை புலி தாக்குதல்களால் 378 பேர் பலியாகியுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், ... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை! இந்தியாவின் பதில் என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.இந்தியா - பாகிஸ்தான் போர் உள்பட இஸ்ரேல் - ஈரான் போர், தாய்லாந்து... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பிரதமர் தேவெ கௌடாவின் பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இருப்பினும், தண்டனை விவரம் நாளை வெளியாகும் என பெங்களூர... மேலும் பார்க்க

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம் அமைப்பது குறித்த ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, மக்களவையில் கேள்வி ... மேலும் பார்க்க