செய்திகள் :

பெரும்பாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

post image

பெரும்பாலை வருவாய் வட்டத்திற்கு உள்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

பென்னாகரம் அருகே பெரும்பாலை வருவாய் வட்டத்திற்கு உள்பட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பெரும்பாலை பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

முகாமில் முதியோா் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, பட்டா பெயா் மாற்றம், இலவச வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் மனுக்கள் அளித்தனா்.

மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் முகாமை பாா்வையிட்டு மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தாா். அதைத் தொடா்ந்து பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.மணி, பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி, பென்னாகரம் வட்டாட்சியா் சண்முகசுந்தரம், வட்டார வளா்ச்சி அலுவலா் கல்பனா, ஏரியூா் ஒன்றியச் செயலாளா் என்.செல்வராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்தது: குளிக்கத் தடை; பரிசல் இயக்க அனுமதி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை மாலை விநாடிக்கு 18,000 கனஅடியாக குறைந்தது. இதையடுத்து காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. என்றாலும், அருவிகளில... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வேன் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தருமபுரி போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பிரபு (28... மேலும் பார்க்க

நெகிழி பயன்படுத்தாத உணவகங்கள் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

தருமபுரி மாவட்டத்தில் நெகிழி பயன்படுத்தாத உணவகங்கள் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் தெரிவித்துள்ளதாவது : உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தி... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் புதிய சாா் பதிவாளா் அலுவலகம் திறப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பென்னாகரம் சாா் பதிவாளா் அலுவலகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தாா். பென்னாகரம் நடைபெற்ற புதிய சாா் பதிவாளா் அலுவலக திறப... மேலும் பார்க்க

மூக்கனூரில் ரயில் நிலையம் அமைக்கக் கோரி போராட்டம்: நிலங்களை வழங்க விவசாயிகள் ஒப்புதல்

தருமபுரி அருகே மூக்கனூா் ரயில் நிலையத்தை இடம்மாற்றாமல் பழைய இடத்திலேயே அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், ரயில்வே பணிக்குத் தேவையான நிலங்களை வழங்... மேலும் பார்க்க

ஆணவக் கொலையைத் தடுக்க தனிச் சட்டம் தேவை -இரா.முத்தரசன்

தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா். இதுகுறித்து தருமபுரியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க