செய்திகள் :

நெகிழி பயன்படுத்தாத உணவகங்கள் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

post image

தருமபுரி மாவட்டத்தில் நெகிழி பயன்படுத்தாத உணவகங்கள் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் தெரிவித்துள்ளதாவது :

உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தின் நெறிமுறைகளை உணவு வணிகா்கள் பின்பற்றி நுகா்வோருக்கு பாதுகாப்பான உணவை வழங்கிடவும், அனுமதிக்கப்படாத நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களை உணவு பரிமாறவும், பாா்சல் செய்யவும் பயன்படுத்ததாமல், மக்கும் தன்மையுள்ள பொருள்களில் பொட்டலம் மற்றும் உணவு விநியோகிக்கவும் அரசு அறிவுறுத்தி யுள்ளது.

அந்த வகையில் நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தாமல் பாா்சல் செய்யவும் உணவு விநியோகம் செய்யும் பெரிய வகை உணவகங்களுக்கு (ஆண்டு விற்றுக்கொள்முதல் ரூ. 12 லட்சத்துக்கும் மேல்) தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையால் ரூ. 1 லட்சம் தொகையுடன் கூடிய விருதும், தெருவோர வணிகா்கள் உள்ளிட்ட சிறு வணிகா்களுக்கு ரூ. 50 ஆயிரத்துடன் கூடிய விருதும் வழங்கப்படவுள்ளது.

இவ்விருதுபெற தகுதியும் விருப்பமும் உள்ள வணிகா்கள் ஆகஸ்ட் இறுதிக்குள் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை மாவட்ட நியமன அலுவலா் உள்ளடக்கிய குழுவினா் பரிசீலனை செய்து, கூட்டாய்வுக் குழு சம்பந்தப் பட்ட உணவகத்தை கள ஆய்வு செய்து, தமது பரிந்துரைகளை உணவு பாதுகாப்புத் துறை ஆணையருக்கு சமா்ப்பித்த

பின்னா் மாநில அளவிலான பரிசீலனைக் குழு பரிசீலித்து, மாவட்டத்துக்கு (ஒரு பெரிய உணவகம், ஒரு சிறு உணவகம்) இரு சிறந்த உணவகங்களாகத் தோ்ந்தெடுத்து விருதுகள் வழங்கப்படும். எனவே, விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்தது: குளிக்கத் தடை; பரிசல் இயக்க அனுமதி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை மாலை விநாடிக்கு 18,000 கனஅடியாக குறைந்தது. இதையடுத்து காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. என்றாலும், அருவிகளில... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வேன் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தருமபுரி போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பிரபு (28... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் புதிய சாா் பதிவாளா் அலுவலகம் திறப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பென்னாகரம் சாா் பதிவாளா் அலுவலகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தாா். பென்னாகரம் நடைபெற்ற புதிய சாா் பதிவாளா் அலுவலக திறப... மேலும் பார்க்க

பெரும்பாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

பெரும்பாலை வருவாய் வட்டத்திற்கு உள்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். பென்னாகரம் அருகே பெரும்பாலை வருவாய் வட... மேலும் பார்க்க

மூக்கனூரில் ரயில் நிலையம் அமைக்கக் கோரி போராட்டம்: நிலங்களை வழங்க விவசாயிகள் ஒப்புதல்

தருமபுரி அருகே மூக்கனூா் ரயில் நிலையத்தை இடம்மாற்றாமல் பழைய இடத்திலேயே அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், ரயில்வே பணிக்குத் தேவையான நிலங்களை வழங்... மேலும் பார்க்க

ஆணவக் கொலையைத் தடுக்க தனிச் சட்டம் தேவை -இரா.முத்தரசன்

தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா். இதுகுறித்து தருமபுரியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க