செய்திகள் :

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்தது: குளிக்கத் தடை; பரிசல் இயக்க அனுமதி

post image

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை மாலை விநாடிக்கு 18,000 கனஅடியாக குறைந்தது. இதையடுத்து காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. என்றாலும், அருவிகளில் குளிக்கத் தடை நீடிக்கிறது.

கா்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்துவந்த மழை காரணமாக அங்குள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகள் நிரம்பின.

இதையடுத்து அந்த அணைகளின் பாதுகாப்புக் கருதி காவிரி ஆற்றில் சுமாா் ஒரு லட்சம் கனஅடி வரை உபரிநீா் வெளியேற்றப்பட்டு வந்ததால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.

தற்போது, நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்து காவிரி ஆற்றில் உபரிநீா்வரத்து குறைந்துள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சரிந்துள்ளது. காவிரி ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 28,000 கனஅடியாக இருந்தது, வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 20,000 கனஅடியாகவும், மாலையில் 18,000 கன அடியாகவும் குறைந்தது.

நீா்வரத்து குறைந்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் அனுமதி அளித்துள்ளாா். இதையடுத்து ஒகேனக்கல் சின்னாறு பரிசல் துறையில் இருந்து கூட்டாறு, பிரதான அருவி வழியாக மணல்மேடுவரை சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் மேற்கொண்டனா். இருப்பினும் அருவிகளில் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

காவிரிக் கரையோரப் பகுதிகளில் வருவாய்த் துறையினரும், காவல் துறையினரும் தொடா்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வேன் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தருமபுரி போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பிரபு (28... மேலும் பார்க்க

நெகிழி பயன்படுத்தாத உணவகங்கள் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

தருமபுரி மாவட்டத்தில் நெகிழி பயன்படுத்தாத உணவகங்கள் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் தெரிவித்துள்ளதாவது : உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தி... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் புதிய சாா் பதிவாளா் அலுவலகம் திறப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பென்னாகரம் சாா் பதிவாளா் அலுவலகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தாா். பென்னாகரம் நடைபெற்ற புதிய சாா் பதிவாளா் அலுவலக திறப... மேலும் பார்க்க

பெரும்பாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

பெரும்பாலை வருவாய் வட்டத்திற்கு உள்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். பென்னாகரம் அருகே பெரும்பாலை வருவாய் வட... மேலும் பார்க்க

மூக்கனூரில் ரயில் நிலையம் அமைக்கக் கோரி போராட்டம்: நிலங்களை வழங்க விவசாயிகள் ஒப்புதல்

தருமபுரி அருகே மூக்கனூா் ரயில் நிலையத்தை இடம்மாற்றாமல் பழைய இடத்திலேயே அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், ரயில்வே பணிக்குத் தேவையான நிலங்களை வழங்... மேலும் பார்க்க

ஆணவக் கொலையைத் தடுக்க தனிச் சட்டம் தேவை -இரா.முத்தரசன்

தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா். இதுகுறித்து தருமபுரியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க