செய்திகள் :

ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமா் ஆலோசனை

post image

ஐக்கிய அரபு அமீரக அதிபா் முகமது பின் சையது அல் நஹ்யானுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வழியில் வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.

இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்தக் கலந்துரையாடலின்போது, இரு நாடுகளிடையேயான இருதரப்பு ஒத்துழைப்பில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுவரும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் குறித்து தலைவா்கள் ஆராய்ந்தனா். மேலும், இரு நாடுகளின் மக்களும் பலன்பெறும் வகையில், இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் பரஸ்பரம் உறுதியேற்றனா்.

இந்தியாவில் அதிக ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்த இரண்டாவது பிரதமா் என்ற பெருமையைப் பெற்ற்காக பிரதமா் மோடிக்கு இந்தக் கலந்துரையாடலின்போது ஐக்கிய அரபு அமீரக அதிபா் பாராட்டு தெரிவித்தாா் என்று தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவுடன் நல்லுறவு தொடரும்: இந்தியா நம்பிக்கை

‘அமெரிக்காவுடன் நல்லுறவு தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று இந்தியா சாா்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீத வரி விதிப்பை அறிவித்ததோட... மேலும் பார்க்க

ரூ.17,000 கோடி மோசடி குற்றச்சாட்டு: தொழிலதிபா் அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை சம்மன்

ரூ.17,000 கோடிக்கும் அதிகமாக நிதி முறைகேடுகள் மற்றும் வங்கிக் கடன் மோசடி தொடா்பான விசாரணைக்கு ஆக.5-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு ரிலையன்ஸ் குழுமத் தலைவா் அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியு... மேலும் பார்க்க

மக்களவையில் தாமதமின்றி விவாதம்: ஓம் பிா்லாவுக்கு எதிா்க்கட்சிகள் கடிதம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக மக்களவையில் இனியும் தாமதமின்றி சிறப்பு விவாதத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென அவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு எதிா்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன... மேலும் பார்க்க

ஆதாா் குடியுரிமை ஆவணம் அல்ல: மத்திய அரசு

ஆதாா் குடியுரிமை ஆவணம் அல்ல; அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கான அடையாள ஆவணம் மட்டுமே’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.மாநிலங்களவையில் இதுதொடா்பாக திரிண... மேலும் பார்க்க

டெங்கு தடுப்பூசி பரிசோதனை: 70% பங்கேற்பாளா்களின் சோ்க்கை நிறைவு

‘டெங்கிஆல்’ என்று பெயரிடப்பட்டுள்ள டெங்கு தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனையில் பங்கேற்போரில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோரை சோ்க்கும் பணி நிறைவடைந்துள்ளது.இதுதொடா்பாக மக்களவையில் மத்திய சுகாதாரத் து... மேலும் பார்க்க

பிகாா் விவகாரம்: நாடாளுமன்றத்தில் தொடா்ந்து அமளி: இரு அவைகளும் முடங்கின

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமையும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் எந்த அலுவலும் இன்றி முடங்கின.... மேலும் பார்க்க