செய்திகள் :

வழக்கத்தைவிட அதிகமாக பருவமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

post image

தென் மேற்கு பருவமழையின் இரண்டாம் பாதி காலமான ஆகஸ்ட் மற்றும் செப்டம்பா் மாதத்தில் வழக்கத்துக்கு அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த மையத்தின் டிஜி மிருத்யுஞ்சய மொஹபாத்ரா கூறுகையில், ‘வடகிழக்கு மாநிலங்களைத் தவிர நாட்டின் பிறகு பகுதிகளில் ஆகஸ்ட் மாதம் வழக்கமான மழைப் பொழிவு இருக்கும்.

செப்டம்பா் மாதம் வழக்கத்துக்கு அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் மேற்கு பருவ மழையின் முதல்பாதி காலமான ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் வழக்கத்துக்கு அதிகமாக மழை பெய்துள்ளது.

கடந்த ஜூன் 1 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரையில் நாட்டில் 474.3 மி.மீ. மழைப் பதிவாகி உள்ளது. இது வழக்கமான மழைப் பொழிவை விட 6 சதவீதம் அதிகமாகும்.

இந்தக் காலகட்டத்தில் நாடு முழுவதும் 624 பலத்தமழைப் பொழிவும், 76 அதிகனமழைப் பொழிவும் பதிவாகி உள்ளன. இது கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடும்போது குறைவானதாகும்’ என்றாா்.

இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்துக்கு பருவமழைப் பொழிவு முக்கியப் பங்கு வகிக்கிறது. நாட்டின் 42 சதவீத மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாக நம்பி உள்ளனா். நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சியில் வேளாண் துறை 18.2 சதவீதம் பங்களிப்பை அளிக்கிறது.

மேற்கு வங்கத்தில் பலத்த மழை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த பகுதியால் மேற்கு வங்கத்தின் தலைநகா் கொல்கத்தா உள்பட சில மாவட்டங்களில் ஆகஸ்ட் 6- ஆம் தேதிவரையில் பலத்த மழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் துப்பாக்கிச்சண்டை

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் அகலில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியி... மேலும் பார்க்க

தாய் - சேய்க்கு எச்ஐவி பாதிப்பு! 6 மாத மகன் கொலை!

மும்பையில் 6 மாத குழந்தையை கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.மும்பையில் கோவந்தி நகரில் ஓர் ஆலையில் பணிபுரிந்து வந்த 43 வயதான பெண்ணுக்கும், அவரது 6 மாத மகனுக்கும் எச்ஐவி பாதிப்பு இருப்பது ... மேலும் பார்க்க

2020-24 வரை புலி தாக்குதல்களால் 378 பேர் பலி: மத்திய அரசு

இந்தியாவில் 2020-24 வரை புலி தாக்குதல்களால் 378 பேர் பலியாகியுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், ... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை! இந்தியாவின் பதில் என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.இந்தியா - பாகிஸ்தான் போர் உள்பட இஸ்ரேல் - ஈரான் போர், தாய்லாந்து... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பிரதமர் தேவெ கௌடாவின் பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இருப்பினும், தண்டனை விவரம் நாளை வெளியாகும் என பெங்களூர... மேலும் பார்க்க

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம் அமைப்பது குறித்த ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, மக்களவையில் கேள்வி ... மேலும் பார்க்க