செய்திகள் :

கிராம உதவியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

post image

தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி அலுவலகங்களில் 2,300 கிராம உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : கிராம உதவியாளர் (Village Assistant)

காலியிடங்கள் : 2,300

சம்பளம்: மாதம் ரூ.11,100 - 35,100

தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். தேர்வில் தோல்வி அடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். காலியிடங்கள் ஏற்பட்டுள்ள கிராமம் அல்லது தாலுகாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.

மிதிவண்டி , இருசக்கர வாகனம் ஓட்டும் திறன், எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நல்ல உடற்தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர் மனைவியோ, கணவரோ உயிரோடு இருக்கும் போது, வேறொரு திருமணம் செய்திருக்கக் கூடாது.

வயது வரம்பு: பொதுப் பிரி வினர்கள் 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பிசி, பிசிஎம், எம்பிசி மற்றும் எஸ்சி, எஸ்சிஏ, எஸ்சி பிரிவினர் 37-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வில் கிராம நிர்வாகம் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். நேர்முகத்தேர்வில் விண்ணப்பதாரரின் தகுதி, இதர சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tn.gov.in என்ற இணைய தள What's New பகுதியில் மேற்கண்ட பணிக்கான விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டத்தின் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூம் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 5.8.2025

விண்ணப்பிக்கத் தேவையான கூடுதல் விபரங்களை தங்களது கிராம ஊராட்சி அலுவலகம் அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று தெரிந்து கொள்ளவும் அல்லது விண்ணப்பப் படிவம் மற்றும் மேற்கண்ட வேலை வாய்ப்பு விபரம் அந்தந்த மாவட்ட இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் படித்தவர்களுக்கு வேலை!

Applications are invited for the vacant posts of Village Assistant in tamil nadu

உளவுத்துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய அரசின்கீழ் செயல்படும் உளவுத் துறைக்கு சொந்தமான அலுவலகங்களில் காலியாக உள்ள 4,987 பாதுகாப்பு உதவியாளர், அலுவலர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இருபாலர்களிடம் இருந்தும் விண்ணப்பங்க... மேலும் பார்க்க

சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையில் வேலை வேண்டுமா?

திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின்கீழ் செயல்படும் மாவட்ட நல சங்கத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி மற்றும் ... மேலும் பார்க்க

எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 3,496 பாராமெடிக்கல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

நாடு முழுவதும் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைகளில்(எய்ம்ஸ்) காலியாகவுள்ள குரூப் பி மற்றும் குருப் சி பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்... மேலும் பார்க்க

பொதுத்துறை நிறுவனத்தில் டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுனமான இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் ரயில்வே, நெடுஞ்சாலைகள், கட்டடங்கள், மின்சாரத் துறை போன்றவற்றில் உள்கட்டமைப்பு பணிகளில் ஈட... மேலும் பார்க்க

விமானப் படையில் வேலை... +2, டிப்ளமோ முடித்தவர்கள் வாய்ப்பு!

இந்திய விமானப் படையில் காலியாகவுள்ள மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு தகுதியான ஆண்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Medical Assistant (Airmen Intake - 2026)சம்பளம்: மாதம் ... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா..? கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு அதிகாரி வேலை!

முன்னணி பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் துணை நிறுவனமான கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் (சிபிஎஸ்எல்) காலியாக பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது... மேலும் பார்க்க