செய்திகள் :

பால்டால் வழியாக அமர்நாத் யாத்திரை தொடக்கம்: இதுவரை 3.93 லட்சம் பேர் தரிசனம்!

post image

பால்டால் பாதை வழியாக அமர்நாத் யாத்திரை செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஜம்முவிலிருந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு ஜூலை 3-ஆம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மழையைத் தொடர்ந்து அமர்நாத் யாத்திரை பாதையின் பஹல்காம் அச்சில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பால்டால் பாதை வழியாக அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது, ஆனால் மோசமான வானிலை காரணமாக ஜம்முவிலிருந்து இடைநிறுத்தப்பட்டது.

ஜம்முவிலிருந்து தெற்கு காஷ்மீர் இமயலையில் உள்ள குகைக் கோயிலுக்கு புதிய குழுவினர் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஷ்மீரில் பெய்த கனமழையால் சாலைகள் பழுதடைந்த நிலையில், பால்டால் மற்றும் பஹல்காம் வழித்தடங்களில் யாத்திரை புதன்கிழமை நிறுத்தப்பட்டது. இதனிடையே பால்தால் பாதையிலிருந்து இன்று காலை யாத்திரை மீண்டும் தொடங்கியது

ஜூலை 31 அன்று ஜம்முவின் பகவதி நகரிலிருந்து பால்தால் மற்றும் நுன்வானில் உள்ள அடிப்படை முகாம்களை நோக்கி எந்த வாகனப் போக்குவரத்தும் அனுமதிக்கப்படாது என்று முடிவு செய்யப்பட்டதாக ஆணையர் ரமேஷ் குமார் கூறினார்.

பஹல்காம், பால்தால் இரட்டை அடிப்படை முகாம்களில் பயணம் செய்வதற்காக பக்தர்கள் பகவதி நகர் அடிப்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜம்முவிலிருந்து யாத்திரை இடைநிறுத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும். ஜூலை 17 அன்று, காஷ்மீரில் உள்ள இரட்டை அடிவார முகாம்களில் பெய்த கனமழை காரணமாக யாத்திரை நிறுத்தப்பட்டது.

ஜூலை 3 ஆம் தேதி பள்ளத்தாக்கிலிருந்து 38 நாள் யாத்திரை தொடங்கியதிலிருந்து 3,880 மீட்டர் உயரமுள்ள குகைக் கோயிலில் உள்ள சிவபெருமானின் பனி லிங்கத்தை இதுவரை 3.93 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளனர்.

கடந்தாண்டு 5.10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குகைக் கோயிலைத் தரிசித்தனர். ரக்ஷா பந்தன் பண்டிகையான ஆகஸ்ட் 9 ஆம் தேதி யாத்திரை நிறைவடைகின்றது.

The Amarnath Yatra resumed from the Baltal axis in the Kashmir valley on Thursday but was suspended from Jammu due to inclement weather conditions.

புதிய விதிமுறை அமல்! ஜிபே, போன்பே பயனர்கள் கவனத்துக்கு...

ஜிபே, போன் பே போன்ற யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்டிருக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.கடந்த ஏப்தல் - மே மாதங்களில் டிஜிட்டல் பணப்... மேலும் பார்க்க

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!

நாட்டில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சமையல் எரியாவு உருளை விலை ரூ.1,789 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வா்த்தக சமையல் எரியாவு உருளை ஒன்றின் விலை ர... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவையில் ரம்மி விளையாடிய அமைச்சருக்கு விளையாட்டுத் துறை ஒதுக்கீடு!

மகாராஷ்டிர சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது ஆன்லைன் ரம்மி விளையாடிய சர்ச்சையில் சிக்கிய அமைச்சா் மாணிக்ராவ் கோகடே, வேளாண் துறையில் இருந்து விளையாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.மகாராஷ்டிர சட்டப்பேரவை... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமா் ஆலோசனை

ஐக்கிய அரபு அமீரக அதிபா் முகமது பின் சையது அல் நஹ்யானுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வழியில் வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளி... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் மீண்டும் முடக்கம் - பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வியாழக்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் மீண்டும் முடங்கின.நாடாளுமன்ற மழைக்... மேலும் பார்க்க

பள்ளிக் கட்டட பரப்பளவுக்கு ஏற்ப வகுப்புப் பிரிவுகளின் எண்ணிக்கை - சிபிஎஸ்இ விதிகளில் திருத்தம்

பள்ளிகளின் மொத்த நில அளவுக்கு பதிலாக கட்டட பரப்பளவின் அடிப்படையில் வகுப்புப் பிரிவுகளின் (செக்ஷன்) அதிகபட்ச எண்ணிக்கையை அனுமதிக்கும் வகையில் விதிமுறைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது மத்திய இடைநிலைக் க... மேலும் பார்க்க