செய்திகள் :

யேமன் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்! அரசு அலுவலகம் சிறைப்பிடிப்பு! ஏன்?

post image

யேமன் நாட்டின் கிழக்குப் பகுதிகளில், 3 வது நாளாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், அந்நாட்டு மக்கள் கடும் வெயிலிலும் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யேமன் நாட்டில், கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவி வருவதால், அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹத்ராமௌத் மாகாணத்தில், நாள்தோறும் சுமார் 19 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஏடன் நகரத்தைத் தலைமையகமாகக் கொண்டுள்ள சர்வதேச அங்கீகாரம் பெற்ற யேமன் அரசுக்கு எதிராக, கடந்த ஜுலை 27 ஆம் தேதி முதல் முகல்லா நகரத்தில், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் சிலர் அங்குள்ள முக்கிய சாலைகளை முடக்கியதுடன், வாகன டயர்களை தீயிட்டு கொளுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஹத்ராமௌத் மாகாணத்தின் மின்சாரத் துறை அலுவலகத்தை நேற்று (ஜூலை 29) போராட்டக்காரர்கள் சிறைப்பிடித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, யேமன் நாட்டில் பருவமழை சரியான அளவில் பெய்யாத சூழலில், பல்வேறு இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாகக் கூறப்படுகிறது.

மேலும், அந்நாட்டில் நிலவும் வறண்ட வானிலையாலும், தற்போது மின்சாரம் தொடர்ந்து துண்டிக்கப்படுவது மக்களின் வாழ்க்கையை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளியிருப்பதாக, சில தொண்டு நிறுவன அமைப்புகள் தெரிவிக்கின்றன.

இத்துடன், 2014-ம் ஆண்டு முதல் யேமனின் அரசுப் படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சிப்படைகளுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றது.

இதில், தலைநகர் சனா உள்ளிட்ட முக்கிய வடக்கு மாகாணங்களை ஹவுதிகள் கைப்பற்றியதால், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசு அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ரஷியாவில் 11 மணிநேரம் கழித்து சுனாமி எச்சரிக்கை வாபஸ்!

வீழ்ச்சியடைந்த பொருளாதார நாடு இந்தியா: டிரம்ப் கடும் விமர்சனம்

புது தில்லி: வீழ்ச்சியடைந்த பொருளாதார நாடு என்று இந்தியாவை கடுமையாக விமர்சித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாத நிலையில், இந்தி... மேலும் பார்க்க

இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களிலேயே மிகப் பயங்கர நிலநடுக்கம் எது? ஏன்?

ரஷியாவுக்கு அருகே கடல் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து அமெரிக்காவின் ஹவாய் தீவு உள்ளிட்ட பகுதிகளில் சுனாமி அலைகள் வீசின.ரஷியாவின் கிழக்குத் தொலைதூரப் பகுதியில் அமைந... மேலும் பார்க்க

ரஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

ரஷியாவின் கிழக்கு கடற்கரை காமசாட்காவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. மேலும் பார்க்க

பாகிஸ்தானிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் நிலை வரலாம்! டிரம்ப்

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு ஏற்படலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.”இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தம் இப்போது வரை இறுதி செய்யப்படவில்லை. எனவே, இந்... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ விவாதத்தில் இந்திய தலைவா்கள் பேச்சு: பாகிஸ்தான் விமா்சனம்

ஆபரேஷன் சிந்தூரின்போது மக்களவையில் இந்திய தலைவா்கள் தெரிவித்த கருத்துகளை பாகிஸ்தான் விமா்சித்துள்ளது. அதேவேளையில், இந்தியாவுடன் அா்த்தமுள்ள பேச்சுவாா்த்தை நடத்துவதில் ஈடுபாடு கொண்டிருப்பதாகவும் அந்நாட... மேலும் பார்க்க

சிறுவா்கள் யு-டியூப் பயன்படுத்தத் தடை

சிறுவா்கள் பயன்படுத்தவதற்குத் தடை விதிக்கப்படவிருக்கும் சமூக ஊடகங்களில் விடியோ பகிா்வுத் தளமான யு-டியூபும் அடங்கும் என்று ஆஸ்திரேலிய அரசு புதன்கிழமை அறிவித்தது.சிறுவா்கள் சீரழிவதைத் தடுக்கும் வகையில் ... மேலும் பார்க்க