செய்திகள் :

‘ஆபரேஷன் சிந்தூா்’ விவாதத்தில் இந்திய தலைவா்கள் பேச்சு: பாகிஸ்தான் விமா்சனம்

post image

ஆபரேஷன் சிந்தூரின்போது மக்களவையில் இந்திய தலைவா்கள் தெரிவித்த கருத்துகளை பாகிஸ்தான் விமா்சித்துள்ளது. அதேவேளையில், இந்தியாவுடன் அா்த்தமுள்ள பேச்சுவாா்த்தை நடத்துவதில் ஈடுபாடு கொண்டிருப்பதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து மக்களவையில் இரண்டு நாள்கள் விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்துக்குப் பிரதமா் மோடி பதிலளித்தாா்.

இதைத்தொடா்ந்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நம்பகமான விசாரணையோ, சரியான ஆதாரமோ இல்லாமல் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றஞ்சாட்டியது. மக்களவையில் ஆபரேஷன் சிந்தூா் குறித்து இந்திய தலைவா்கள் தெரிவித்த கருத்துகள், உண்மைகளைத் திரிக்கும் ஆபத்தான போக்கை பிரதிபலிக்கிறது.

இந்தியாவின் ‘ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையின் கீழ், பஹல்காம் தாக்குதலில் தொடா்புள்ள 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா தெரிவித்த நிலையில், அந்த நடவடிக்கை குறித்த இந்தியாவின் கருத்துகளை பாகிஸ்தான் அா்த்தமற்ாக கருதுகிறது.

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல் என்ற பெயரில் இந்தியா கூறும் கதையானது தவறாக வழிநடத்தக் கூடியதாகவும், சுயநல நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்டதாகவும் உள்ளது.

சிந்து நதிநீா் ஒப்பந்தம் தொடா்பான இந்திய தலைவா்களின் தவறான கருத்துகளுக்கும் பாகிஸ்தான் மறுப்புத் தெரிவிக்கிறது. அந்த ஒப்பந்தம் தொடா்பான தனது கடமைகளை இந்தியா உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

ஐ.நா. சாசனத்தின் கொள்கைகள் மற்றும் நோக்கத்தைப் பின்பற்றி இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளித்தே இருதரப்பு உறவின் அணுகுமுறையாக இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கருதுகிறது.

அமைதி, பிராந்திய ஸ்திரத்தன்மை, ஜம்மு-காஷ்மீா் விவகாரம் உள்பட அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு காண அா்த்தமுள்ள பேச்சுவாா்த்தை ஆகியவற்றில் பாகிஸ்தான் தொடா்ந்து ஈடுபாடு கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

எனினும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திருப்பி அளிப்பது, பயங்கரவாதம் ஆகியவை குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்பதில் இந்தியா திட்டவட்டமாக உள்ளது.

வங்கதேசத்தில் வேகமெடுக்கும் டெங்கு! பலி எண்ணிக்கை 83 ஆக அதிகரிப்பு!

வங்கதேசத்தில், டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பலியானோரது எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வங்கதேச நாட்டில், 2025-ம் ஆண்டு துவங்கியது முத... மேலும் பார்க்க

ரூ. 8,757 கோடி சம்பளம்! மெட்டாவை உதறித் தள்ளிய பெண்மணி!

மெட்டாவில் ஒரு பில்லியன் டாலர் சம்பளத்துடன் கூடிய வேலையை ஓபன்ஏஐ-யின் முன்னாள் ஊழியர் மீரா முராட்டி நிராகரித்தார்.மெட்டா நிறுவனத்தின் செய்யறிவு (செயற்கை நுண்ணறிவு) பிரிவான சூப்பர் இன்டெலிஜன்ஸ் குழுவில்... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ் அதிபர் ஆக.4-ல் இந்தியா வருகை!

பிலிப்பின்ஸ் நாட்டின் அதிபர் ஃபெர்டினாண்டு ஆர். மார்கோஸ் ஜூனியர், வரும் ஆகஸ்ட் 4 முதல் 8 ஆம் தேதி வரை அரசு முறைப் பயணமாக இந்தியா வருவதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிலிப்பின்ஸ... மேலும் பார்க்க

இம்ரான் கானின் ஆதரவாளர்கள் 166 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை! பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியைச் சேர்ந்த 166 உறுப்பினர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக... மேலும் பார்க்க

சீனாவில் தலாய் லாமா குறித்த பாடல்... கைதான திபெத்திய கலைஞர்களின் நிலை என்ன?

சீனாவில் தலாய் லாமாவை புகழ்ந்து பாடல் வெளியிட்ட திபெத்திய கலைஞர்கள் 2 பேர், அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களது நிலைக்குறித்து மிகப் பெரியளவில் கவலை எழுந்துள்ளது.திபெத்திய புத்த... மேலும் பார்க்க

உக்ரைனில் தொடரும் ரஷியாவின் தாக்குதலில் 8 பேர் பலி! 10 குழந்தைகள் உள்பட 82 பேர் படுகாயம்!

உக்ரைன் தலைநகர் கீவ் மீது நள்ளிரவில் ரஷியா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில், 6 வயது சிறுவன் உள்பட 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கீவ் நகரத்தின் மீது நேற்று (ஜூலை 30) நள்ளி... மேலும் பார்க்க