செய்திகள் :

சீனாவில் தலாய் லாமா குறித்த பாடல்... கைதான திபெத்திய கலைஞர்களின் நிலை என்ன?

post image

சீனாவில் தலாய் லாமாவை புகழ்ந்து பாடல் வெளியிட்ட திபெத்திய கலைஞர்கள் 2 பேர், அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களது நிலைக்குறித்து மிகப் பெரியளவில் கவலை எழுந்துள்ளது.

திபெத்திய புத்த மதத்தின் தலைமை மதகுருவான, தலாய் லாமா சமீபத்தில் தனது 90-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அதை முன்னிட்டு, சீனாவில் வசித்து வரும் திபெத்திய கலைஞர்களான அசாங் (எ) ட்சுக்டே மற்றும் பெல்கியோங் ஆகியோர் அவரை புகழ்ந்து பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2006-ம் ஆண்டு திபெத்திய பாடகர் ஷெர்டன் என்பவர் பாடி வெளியிட்ட பாடலை, இவர்கள் மறு உருவாக்கம் செய்து சீன சமூக ஊடகமான குவாய்ஷோவில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

தலாய் லாமாவின் வாழ்க்கை, வரலாறு உள்ளிட்டவற்றை மையமாகக் கொண்டு அரிக் சோட்டன் என்பவர் எழுதிய அந்தப் பாடலின் வரிகள், திபெத்தை ஆக்கிரமித்துள்ள சீன அரசினால் சர்ச்சையான ஒன்றாகக் கருதப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் வெளியிட்ட பாடல் சீனாவில் மிகப் பெரியளவில் கவனம் பெற்றவுடன், இருவரும் இம்மாத (ஜூலை) துவக்கத்தில், சீன அதிகாரிகளால் எந்தவொரு சட்டப்பூர்வ அறிவுப்பும் இன்றி கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, கைது செய்யப்பட்ட அசாங் சீனாவில் திபெத்திய கலாசாரம், மொழி, தெய்வீகம் ஆகியவற்றை தனது பாடல்கள் மூலம் மக்களிடையே பரப்பி வந்துள்ளார்.

மேலும், கடந்த 4 வாரங்களாக இருவரைப் பற்றியும் எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை என அவர்களது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளதால், திபெத்திய ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவர்களது நிலைக் குறித்து கவலைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: உக்ரைனில் தொடரும் ரஷியாவின் தாக்குதலில் 8 பேர் பலி! 10 குழந்தைகள் உள்பட 82 பேர் படுகாயம்!

இந்தியா உள்பட 69 நாடுகளுக்கு புதிய வரி: டிரம்ப் கையெழுத்து! யாருக்கு அதிகம்? குறைவு?

அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை கையெழுத்திட்டார்.இந்த உத்தரவு ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெ... மேலும் பார்க்க

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: கனடாவும் அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க திட்டமிட்டுள்ளதாக கனடா அறிவித்துள்ளது.ஏற்கெனவே, இஸ்ரேல், அமெரிக்காவின் எதிா்ப்பையும் மீறி பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்கப்போவதாக பிரான்ஸும், தங்களின் சில நிபந்தனை... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ் அதிபா் ஆக.4-இல் இந்தியா வருகை

பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்டினண்ட் ஆா்.மாா்கோஸ் ஜூனியா், ஆகஸ்ட் 4 முதல் 8 வரை அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறாா்.இந்தப் பயணத்தின்போது குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை சந்திக்கும் அவா், பிரதமா் நரேந்... மேலும் பார்க்க

ஈரானுடன் வா்த்தகம்: 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரானுடன் வா்த்தகம் மேற்கொண்டுவரும் இந்தியாவைச் சோ்ந்த 6 நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதித்து அந் நாடு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.காஞ்சன் பாலிமா்ஸ், அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், ரா... மேலும் பார்க்க

அமெரிக்கா-பாகிஸ்தான் வா்த்தக ஒப்பந்தம் இறுதி : டிரம்ப் அறிவிப்பு

‘பாகிஸ்தானுடன் அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. இதன்படி, அந்நாட்டில் எண்ணெய் வளங்கள் மேம்படுத்தப்பட உள்ளன’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.மேலும், ‘இந்தியாவுக்கு பாக... மேலும் பார்க்க

அவசரநிலை வாபஸ்: மியான்மா் ராணுவம் அறிவிப்பு

மியான்மரில் நான்கரை ஆண்டுகளுக்கு முன்னா் ஆட்சியைக் கைப்பற்றியபோது அறிவித்திருந்த அவசரநிலையை திரும்பப் பெறுவதாக அந்த நாட்டு ராணுவம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில... மேலும் பார்க்க