செய்திகள் :

ஆக.2, 3 தேதிகளில் 24 அஞ்சலகங்கள் செயல்படாது

post image

தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் நடைபெறவுள்ளதால் சென்னை கோட்டத்துக்குள்பட்ட 24 அஞ்சலகங்கள் ஆக.2, 3 ஆகிய தேதிகளில் செயல்படாது என அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை கோட்ட அஞ்சல் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

எண்ம (டிஜிட்டல்) இந்தியா திட்டத்தின் கீழ், அஞ்சல் துறையின் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப மென்பொருளை (ஏபிடி 2.0) அஞ்சல் துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தை ஆக.4-ஆம் தேதி முதல் சென்னை கோட்டத்துக்குள்பட்ட 24 அஞ்சலகங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய மென்பொருள் மாற்றும் பணிகள் ஆக.2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.

இதனால், அந்த நாள்களில் சென்னை தியாகராய நகா், மயிலாப்பூா், சூளைமேடு, தேனாம்பேட்டை , திருவல்லிக்கேணி, கிரீம்ஸ் சாலை, கோபாலபுரம், ராயப்பேட்டை , தியாகராயநகா் வடக்கு உள்பட மொத்தம் 24 அஞ்சலகங்கள் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் சுமார் 1 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையொட்... மேலும் பார்க்க

மோசடிப் புகார்: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!

ரூ. 1000 கோடி கடன் வாங்கித் தருவதாக ரூ. 5 கோடி பெற்ற மோசடிப் புகாரில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தில்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.புதுதில்லியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் திலீப்குமார். க... மேலும் பார்க்க

பாஜக மாநில துணைத் தலைவராக குஷ்பு நியமனம்

சென்னை: தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகளை நியமித்து மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் ஒப்புதலுடன், தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய ம... மேலும் பார்க்க

அண்ணா வழியில் செல்ல இன்னொரு கட்சி எதற்கு தம்பி? - விஜய்யை விமர்சித்த தமிழிசை!

தமிழ்நாட்டில் இனி 'ஆப்'பிற்கும் ஆதரவு கிடையாது, அப்பாவுக்கும் ஆதரவு கிடையாது என தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் பதிவிட்டுள்ளார். சென்னை பனையூரில் நடைபெற்ற நிகழ்வில... மேலும் பார்க்க

சாதியக் கட்டமைப்பை உடைப்போம்: நெல்லை ஆணவக் கொலைக்கு கனிமொழி கண்டனம்!

நெல்லையைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டதற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ... மேலும் பார்க்க

ஜெயலலிதா செய்தது வரலாற்றுப் பிழை: கடம்பூர் ராஜு பேச்சு

1999ல் மத்தியில் பாஜக ஆட்சியைக் கவிழ்த்து வரலாற்று பிழை செய்துவிட்டதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் குறிப்பிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்ட... மேலும் பார்க்க