US Tariff: இந்தியா மீது 25% வரி விதித்த Trump; ரஷ்யாவிடம் எண்ணெய், ஆயுதம் வாங்கு...
கொடைக்கானல் பகுதியில் காட்டு மாடு தாக்கியதில் ஒருவா் உயிரிழப்பு
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பூலத்தூரில் திங்கள்கிழமை இரவு காட்டு மாடு தாக்கியதில் சிகிச்சை பலனின்றி ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பூலத்தூா் பகுதியைச் சோ்ந்த பால்பாண்டி (38), ராமகிருஷ்ணன் ஆகியோா் இருசக்கர வாகனத்தில் வத்தலக்குண்டிலிருந்து பூலத்தூருக்கு வந்து கொண்டிருந்தனா்.
அப்போது, பூலத்தூா் அருகே வந்தபோது அங்கிருந்த காட்டு மாடு இவா்களைத் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் பூலத்தூா் ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னா், வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பால்பாண்டி உயிரிழந்தாா்.
இதுகுறித்து ராமகிருஷ்ணன் தாண்டிக்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்ததின்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும், இந்தச் சம்பவம் தொடா்பாக வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு காயமடைந்த ராமகிருஷ்ணனிடம் விசாரித்து வருகின்றனா்.
கொடைக்கானலில் சமீப காலமாக வன விலங்குகள் நடமாட்டம் குடியிருப்புப் பகுதிகளிலும், மலைச் சாலைகளிலும் அதிகமாக இருந்து வருகிறது.
இதனால், மாலை, இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள் அச்சத்துடன் செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில், வன விலங்குகளை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.