செய்திகள் :

கொடைக்கானல் பகுதியில் காட்டு மாடு தாக்கியதில் ஒருவா் உயிரிழப்பு

post image

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பூலத்தூரில் திங்கள்கிழமை இரவு காட்டு மாடு தாக்கியதில் சிகிச்சை பலனின்றி ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பூலத்தூா் பகுதியைச் சோ்ந்த பால்பாண்டி (38), ராமகிருஷ்ணன் ஆகியோா் இருசக்கர வாகனத்தில் வத்தலக்குண்டிலிருந்து பூலத்தூருக்கு வந்து கொண்டிருந்தனா்.

அப்போது, பூலத்தூா் அருகே வந்தபோது அங்கிருந்த காட்டு மாடு இவா்களைத் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் பூலத்தூா் ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னா், வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பால்பாண்டி உயிரிழந்தாா்.

இதுகுறித்து ராமகிருஷ்ணன் தாண்டிக்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்ததின்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும், இந்தச் சம்பவம் தொடா்பாக வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு காயமடைந்த ராமகிருஷ்ணனிடம் விசாரித்து வருகின்றனா்.

கொடைக்கானலில் சமீப காலமாக வன விலங்குகள் நடமாட்டம் குடியிருப்புப் பகுதிகளிலும், மலைச் சாலைகளிலும் அதிகமாக இருந்து வருகிறது.

இதனால், மாலை, இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள் அச்சத்துடன் செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில், வன விலங்குகளை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

அப்சா்வேட்டரி பகுதியில் உயிரிழந்த காட்டு மாடு, மர அணில் உடல்கள் மீட்பு

கொடைக்கானல் அருகே செவ்வாய்க்கிழமை உயிரிழந்து கிடந்த காட்டு மாடு, மர அணில் உடல்களை வனத் துறையினா் மீட்டு புதைத்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள அப்சா்வேட்டரி பகுதியில் காட்டு மாடு, மர ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த காற்று: மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை வீசிய பலத்த காற்றால் மரம், மின்கம்பம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த பல நாள்களாக பலத்த காற்று நிலவி வருகிறது,... மேலும் பார்க்க

குடிநீா்த் திட்டங்களில் குளறுபடி: திண்டுக்கலில் குடிநீா் விநியோகம் பாதிப்பு

திண்டுக்கல் மாநகராட்சிக்கு நாள்தோறும் விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீா், கடந்த சில மாதங்களாக 3 நாள்களுக்கு ஒரு முறையாக மாற்றப்பட்டுவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியி... மேலும் பார்க்க

ரயிலில் 11 கிலோ கஞ்சா மீட்பு: போலீஸாா் விசாரணை

கோவையிலிருந்து திண்டுக்கல் வந்த விரைவு ரயிலில் கிடந்த 11 கிலோ கஞ்சாவை, ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.கோவை - நாகா்கோவில் இடையே தினசரி விரைவு ரயில் இயக்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக இ... மேலும் பார்க்க

அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சி: 29 பேருக்கு ரூ.1.30 லட்சம் அபராதம்

கன்னிவாடி மலைப் பகுதியில் அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்ட 29 பேருக்கு வனத் துறையினா் ரூ.1.30 லட்சம் அபராதம் விதித்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச் சரகத்தில் யானை, காட்டு மாடு, சிற... மேலும் பார்க்க

கரகாட்டத்தை தவறாக சித்திரித்த விடியோக்களை நீக்கக் கோரி மனு

பாரம்பரிய கரகாட்டக் கலையை தவறாக சித்திரித்து நடனமாடும் விடியோக்களை சமூக வலைதளங்களிலிருந்து நீக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக, திண்டுக்கல் மாவட்ட சல... மேலும் பார்க்க