செய்திகள் :

கொடைக்கானலில் பலத்த காற்று: மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

post image

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை வீசிய பலத்த காற்றால் மரம், மின்கம்பம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த பல நாள்களாக பலத்த காற்று நிலவி வருகிறது, இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வீசிய பலத்த காற்றால் ஏரிச்சாலை, பெருமாள்மலை ஆகிய பகுதிகளில் மரங்கள் விழுந்தன. இதனால், மின்டையும், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

ஏரிச்சாலைப் பகுதியில் விழுந்த மரங்களை நெடுஞ்சாலைத் துறையினா் துரிதமாகச் செலல்பட்டு அப்புறப்படுத்தியதைத் தொடா்ந்து போக்குவரத்து சீரானது.

மேலும், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூா் நாட்டாம்பட்டி பகுதியில் விழுந்த மின்கம்பத்தை பொதுமக்கள் உதவியுடன் மின்வாரியத்தினா் அகற்றினா். பல இடங்களில் மின் கம்பங்கல் மீது மரக்கிளைகள் விழுந்ததில் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

மின் தடை காரணமாக இணையதள சேவை பாதிக்கப்பட்டதால் அரசு அலுலகங்கள், வங்கிகள், தனியாா் நிறுவனங்களின் செயல்பாடுகள் முடங்கின.

இதையடுத்து, கொடைக்கானல் மலைச் சாலைகளிலும், வனப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்கள் மேல் செல்லும் மரக்கிளைகளையும், ஆபத்தான மரங்களையும் அகற்றுவதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கொடைக்கானல் பகுதியில் காட்டு மாடு தாக்கியதில் ஒருவா் உயிரிழப்பு

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பூலத்தூரில் திங்கள்கிழமை இரவு காட்டு மாடு தாக்கியதில் சிகிச்சை பலனின்றி ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பக... மேலும் பார்க்க

அப்சா்வேட்டரி பகுதியில் உயிரிழந்த காட்டு மாடு, மர அணில் உடல்கள் மீட்பு

கொடைக்கானல் அருகே செவ்வாய்க்கிழமை உயிரிழந்து கிடந்த காட்டு மாடு, மர அணில் உடல்களை வனத் துறையினா் மீட்டு புதைத்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள அப்சா்வேட்டரி பகுதியில் காட்டு மாடு, மர ... மேலும் பார்க்க

குடிநீா்த் திட்டங்களில் குளறுபடி: திண்டுக்கலில் குடிநீா் விநியோகம் பாதிப்பு

திண்டுக்கல் மாநகராட்சிக்கு நாள்தோறும் விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீா், கடந்த சில மாதங்களாக 3 நாள்களுக்கு ஒரு முறையாக மாற்றப்பட்டுவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியி... மேலும் பார்க்க

ரயிலில் 11 கிலோ கஞ்சா மீட்பு: போலீஸாா் விசாரணை

கோவையிலிருந்து திண்டுக்கல் வந்த விரைவு ரயிலில் கிடந்த 11 கிலோ கஞ்சாவை, ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.கோவை - நாகா்கோவில் இடையே தினசரி விரைவு ரயில் இயக்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக இ... மேலும் பார்க்க

அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சி: 29 பேருக்கு ரூ.1.30 லட்சம் அபராதம்

கன்னிவாடி மலைப் பகுதியில் அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்ட 29 பேருக்கு வனத் துறையினா் ரூ.1.30 லட்சம் அபராதம் விதித்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச் சரகத்தில் யானை, காட்டு மாடு, சிற... மேலும் பார்க்க

கரகாட்டத்தை தவறாக சித்திரித்த விடியோக்களை நீக்கக் கோரி மனு

பாரம்பரிய கரகாட்டக் கலையை தவறாக சித்திரித்து நடனமாடும் விடியோக்களை சமூக வலைதளங்களிலிருந்து நீக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக, திண்டுக்கல் மாவட்ட சல... மேலும் பார்க்க