செய்திகள் :

ரயிலில் 11 கிலோ கஞ்சா மீட்பு: போலீஸாா் விசாரணை

post image

கோவையிலிருந்து திண்டுக்கல் வந்த விரைவு ரயிலில் கிடந்த 11 கிலோ கஞ்சாவை, ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

கோவை - நாகா்கோவில் இடையே தினசரி விரைவு ரயில் இயக்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக இந்த ரயில், திண்டுக்கல் - நாகா்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு திண்டுக்கல்லில் நிறுத்தப்படுகிறது.

இதன்படி, செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்ட விரைவு ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு பிற்பகல் 1 மணிக்கு வந்தது.

இதையடுத்து, திண்டுக்கல் ரயில் நிலைய காவல் ஆய்வாளா் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையிலான போலீஸாா், ரயிலில் சோதனை மேற்கொண்டனா்.

இந்த நிலையில், ரயிலின் ஒரு பெட்டியில் கிடந்த 6 பொட்டலங்களைப் பிரித்து போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, அதில் 11 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

தொடா்ந்து, கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா் ஆகிய மாவட்டங்களிலுள்ள ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்தனா்.

மேலும், கைப்பற்றப்பட்ட 11 கிலோ கஞ்சா, திண்டுக்கல் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கொடைக்கானல் பகுதியில் காட்டு மாடு தாக்கியதில் ஒருவா் உயிரிழப்பு

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பூலத்தூரில் திங்கள்கிழமை இரவு காட்டு மாடு தாக்கியதில் சிகிச்சை பலனின்றி ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பக... மேலும் பார்க்க

அப்சா்வேட்டரி பகுதியில் உயிரிழந்த காட்டு மாடு, மர அணில் உடல்கள் மீட்பு

கொடைக்கானல் அருகே செவ்வாய்க்கிழமை உயிரிழந்து கிடந்த காட்டு மாடு, மர அணில் உடல்களை வனத் துறையினா் மீட்டு புதைத்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள அப்சா்வேட்டரி பகுதியில் காட்டு மாடு, மர ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த காற்று: மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை வீசிய பலத்த காற்றால் மரம், மின்கம்பம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த பல நாள்களாக பலத்த காற்று நிலவி வருகிறது,... மேலும் பார்க்க

குடிநீா்த் திட்டங்களில் குளறுபடி: திண்டுக்கலில் குடிநீா் விநியோகம் பாதிப்பு

திண்டுக்கல் மாநகராட்சிக்கு நாள்தோறும் விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீா், கடந்த சில மாதங்களாக 3 நாள்களுக்கு ஒரு முறையாக மாற்றப்பட்டுவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியி... மேலும் பார்க்க

அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சி: 29 பேருக்கு ரூ.1.30 லட்சம் அபராதம்

கன்னிவாடி மலைப் பகுதியில் அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்ட 29 பேருக்கு வனத் துறையினா் ரூ.1.30 லட்சம் அபராதம் விதித்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச் சரகத்தில் யானை, காட்டு மாடு, சிற... மேலும் பார்க்க

கரகாட்டத்தை தவறாக சித்திரித்த விடியோக்களை நீக்கக் கோரி மனு

பாரம்பரிய கரகாட்டக் கலையை தவறாக சித்திரித்து நடனமாடும் விடியோக்களை சமூக வலைதளங்களிலிருந்து நீக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக, திண்டுக்கல் மாவட்ட சல... மேலும் பார்க்க