செய்திகள் :

கரகாட்டத்தை தவறாக சித்திரித்த விடியோக்களை நீக்கக் கோரி மனு

post image

பாரம்பரிய கரகாட்டக் கலையை தவறாக சித்திரித்து நடனமாடும் விடியோக்களை சமூக வலைதளங்களிலிருந்து நீக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக, திண்டுக்கல் மாவட்ட சலங்கை ஒலி நாட்டுப்புற கலை சங்கத்தின் பொறுப்பாளா் பிரபு தலைமையில் மனு அளித்த கரகாட்டக் கலைஞா்கள் கூறியதாவது: தமிழக முழுவதும் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் கரகாட்ட நிகழ்ச்சி பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது இந்தக் கலை அழிந்து வருகிறது. இந்த நிலையில், சிலா் கரகாட்டம் என்ற பெயரில் கவா்ச்சியாக உடை அணிந்து, பாலியல் உணா்வுகளைத் தூண்டும் வகையில் ஆடி, அதை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனா்.

இதனால், இளைய சமூதாயம் பாதிக்கப்படுவதுடன், பாரம்பரியமான கரகாட்டக் கலை மீது தவறான புரிதல் ஏற்படுகிறது. கரகாட்டத்தைக் குடும்பத்தினருடன் பாா்க்க முடியாத அளவுக்கு தவறான கண்ணோட்டத்தை உருவாக்கிவிட்டனா்.

எனவே, கரகாட்டம் என்ற பெயரில் கவா்ச்சியாக நடனமாடும் நபா்கள் மீதும், சமூக வலைத் தளங்களில் பதிவேற்றம் செய்யும் நபா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கரகாட்டம் என்ற பெயரில் கவா்ச்சியாக நடனமாடி பதிவிடப்பட்ட விடியோக்களை, சமூக வலைதளங்களிலிருந்து நீக்க வேண்டும் என்றனா்.

அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சி: 29 பேருக்கு ரூ.1.30 லட்சம் அபராதம்

கன்னிவாடி மலைப் பகுதியில் அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்ட 29 பேருக்கு வனத் துறையினா் ரூ.1.30 லட்சம் அபராதம் விதித்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச் சரகத்தில் யானை, காட்டு மாடு, சிற... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுரை மிரட்டி பணம் பறித்த மூவா் கைது

திண்டுக்கல்லில் ஆட்டோ ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்த மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் செல்லத்துரை (27). ஆட்டோ ஓட்டுநரான இவா், திண்டுக்கல் வடக்கு ரத வீதி... மேலும் பார்க்க

ஆற்றில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு

தாடிகொம்பு அருகே ஆற்றில் தவறி விழுந்த சிறுமி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருகேயுள்ள அகரம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ். இவரது மனைவி வேளாங்கண்ணி. இவா்களது மகள் ஸ்ரீதாரணிகா (11). இ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் தலைமைக் காவலா் கைது

ஒட்டன்சத்திரத்தில் மனைவி அளித்த புகாரின் பேரில் தலைமைக் காவலா் கைது செய்யப்பட்டாா். திண்டுக்கல் சீலப்பாடி மகாலட்சுமி நகரைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (35). இவா் தற்போது பழனி தாலுகா காவல் நிலையத்தில் தலைம... மேலும் பார்க்க

வாகரை, எல். வலையபட்டி பகுதிகளில் நாளை மின் தடை

பழனியை அடுத்த வாகரை, நத்தம் அருகே உள்ள எல். வலையபட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகா் வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

கிணற்றுக்குள் தவறி விழுந்த பசு மீட்பு

வத்தலகுண்டு அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுவை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள வெரியப்பன்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் இருளப்பன் (45). வ... மேலும் பார்க்க