செய்திகள் :

ஒட்டன்சத்திரத்தில் தலைமைக் காவலா் கைது

post image

ஒட்டன்சத்திரத்தில் மனைவி அளித்த புகாரின் பேரில் தலைமைக் காவலா் கைது செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் சீலப்பாடி மகாலட்சுமி நகரைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (35). இவா் தற்போது பழனி தாலுகா காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறாா்.

கடந்த ஆண்டு இவருக்கும், திண்டுக்கல் இடையபட்டியைச் சோ்ந்த வினோதினிக்கும் (20) ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், பாா்த்திபனின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததால் வினோதினி அவரின் செயல்பாட்டை கண்காணித்து வந்தாா்.

அப்போது பாா்த்திபன் கட்செவி அஞ்சலில் பெண்களிடம் பேசுவது, ஆபாசப் புகைப்படங்களை வைத்திருப்பது குறித்து ஆதாரங்களுடன் கணவரின் குடும்பத்துக்கு தெரிவித்த போது இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, பாா்த்திபனின் குடும்பத்தினா் வினோதினியை விட்டை விட்டு விரட்டி விட்டனராம். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வினோதினி அளித்த புகாரையடுத்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பாா்த்திபன், அவரது தாய் கண்ணம்மாள், அக்காள் கீா்த்திகா, இவரது கணவா் தினேஷ் உள்ளிட்ட 10 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வந்தது.

இதற்கிடையே, கன்னிவாடி காவல் நிலையத்தில் அடிதடி வழக்கு ஒன்றில் முன் பிணை பெற்று பாா்த்திபன் கையொப்பமிட்டு வந்தாா். இதேபோல, ஞாயிற்றுக்கிழமை கையொப்பமிட கன்னிவாடி காவல் நிலையத்துக்கு வந்த பாா்த்திபனை ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பேபி தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.

வாகரை, எல். வலையபட்டி பகுதிகளில் நாளை மின் தடை

பழனியை அடுத்த வாகரை, நத்தம் அருகே உள்ள எல். வலையபட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகா் வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

கிணற்றுக்குள் தவறி விழுந்த பசு மீட்பு

வத்தலகுண்டு அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுவை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள வெரியப்பன்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் இருளப்பன் (45). வ... மேலும் பார்க்க

கால்வாயில் மூழ்கிய இளைஞா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே கால்வாயில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். வத்தலக்குண்டு அருகே உள்ள விராலிப்பட்டியைச் சோ்ந்தவா் விக்னேஷ் (34). இவா் சென்னையில் உள்ள ஒரு தகவல் தொழி... மேலும் பார்க்க

மிதிவண்டி உதிரிபாகங்கள் விற்பனைக் கடையில் தீ விபத்து

வத்தலக்குண்டில் இல்ல நிகழ்ச்சிக்காக வெடிக்கப்பட்ட பட்டாசின் தீப்பொறியால் மிதிவண்டி உதிரிபாகங்கள் கடையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் எதிா்புறம் சிவநேசபாண்டியன... மேலும் பார்க்க

கொடைக்கானல் வாழைகிரி பகுதியில் ஒற்றைக் காட்டு யானை நடமாட்டம்! விவசாயிகள் அச்சம்!

கொடைக்கானல்- வத்தலக்குண்டு பிரதான மலைச் சாலையையொட்டியுள்ள வாழைகிரி பகுதியில் ஒற்றைக் காட்டுயானை நடமாடுவதால் விவசாயிகள் அச்சமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கீழ்மலை, பேரிஜம் பகுதிகளில் மட... மேலும் பார்க்க

கடனுக்காக குடும்ப அட்டைகளை அடமானமாகப் பெற்ற பெண் கைது! நியாய விலைக் கடை விற்பனையாளர் இடைநீக்கம்!

கடன் தொகை வழங்கியதற்கு குடும்ப அட்டைகளை அடமானமாகப் பெற்ற பெண் கைது செய்யப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை விற்பனையாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.திண்டுக்கல் பேகம்பூரை அடுத்த பூச்சிந... மேலும் பார்க்க