செய்திகள் :

ராமேஸ்வரம்: சரக்கு வாகனம் - ஆட்டோ மோதல்; விபத்தில் ஓட்டுநர்கள் இருவர் உயிரிழந்த சோகம்..

post image

ராமேஸ்வரம் ஏர்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது நண்பர்கள் மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன் மற்றும் அகஸ்தியன். ஆட்டோ ஓட்டுநர்களான இவர்கள் மூவரும் மாதேஸ்வரனுக்கு சொந்தமான ஆட்டோவிற்கு தரச்சான்றிதழ் பெறுவதற்காக ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றிருந்தனர். அங்கு ஆட்டோவிற்கு தர சான்றிதழ் பெற்ற பின்னர் நேற்று மாலை ராமேஸ்வரம் திரும்பி கொண்டிருந்தனர்.

விபத்தில் உயிரிழந்த சரவணன்

இந்நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து டைல்ஸ் கற்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனமான மினி வேன் எதிரில் வந்துள்ளது. இந்த வாகனத்தை நாலுபனை கிராமத்தைச் சேர்ந்த மணிகண்ணன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். தங்கச்சிமடம் நாலுபனை கிராமத்திற்கு செல்லும் சாலை அருகே வந்த இந்த வேன் மீது எதிரே வந்த ஆட்டோ மோதியது. இதில் ஆட்டோவும் மினி வேனும் சாலையில் கவிந்து போனது.

இந்த கோர விபத்தில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள் சரவணன் மற்றும் மாதேஸ்வரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

படுகாயமடைந்த நிலையில் சாலையில் கிடந்த அகஸ்தியன் மற்றும் மணிகண்ணனை அப்பகுதியில் சென்றவர்கள் மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்தில் உயிரிழந்த மாதேஸ்வரன்

இந்த கோர விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த பாம்பன் போலீஸார், விபத்தில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் இருவரின் உடல்களையும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் சரவணனுக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகளும் உள்ளனர். மற்றொரு ஆட்டோ ஓட்டுநரான மாதேஸ்வரனுக்கும் மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சதுரகிரி மலையில் வேகமாய் பரவும் காட்டுத்தீ; பக்தர்கள் செல்ல தடை; தீயை அணைக்கப் போராடும் வனத்துறை

விருதுநகர் மாவட்டஸ்ரீவில்லிபுத்தூர்அருகே வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரிசுந்தர மகாலிங்கம்கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது... மேலும் பார்க்க

மார்த்தாண்டம்: பைக் விபத்தில் 2 மாணவர்கள் பலி, போராட்டம்.. யார் காரணம்? - போலீஸார் சொல்வது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு பஸ் மற்றும் பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தேங்காய்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த அஜ்மல், அப்சல் ஆகிய இரண்டு... மேலும் பார்க்க

அறுந்து விழுந்த மின்சாரக் கம்பி; கூட்ட நெரிசலில் பக்தர்கள் 2 பேர் பலி.. உத்தரப்பிரதேசத்தில் சோகம்

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பராபங்கியின் அவ்சனேஷ்வர் கோயிலில் இன்று அதிகாலைமுதலே கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் இருந்தப் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்திருக்கின்றன... மேலும் பார்க்க

உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ்கர் சிங் விளக்கம்

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரின் சிவாலிக் மலைகளில் உள்ள பில்வா பர்வத்தின் உச்சியில் மான்சா தேவி கோயில் அமைந்திருக்கிறது. சுமார் 1.5 கிமீ மலை மீது ஏற மலைப்பாதை, படிகட்டுகள், ரோப்வே வழியாகக் கோயிலை அடை... மேலும் பார்க்க

முதுகுளத்தூர்: டிராக்டர் கவிழ்ந்து 3 பெண்கள் பலி; ரேஷன் பொருள்கள் வாங்கி வரும் போது நடந்த சோகம்..

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது கூவர் கூட்டம் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 80 குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் நியாயவிலை கடை இல்லாத நிலையில் அருகில் உள்ள சின்ன பொதிகுளம் கிராமத... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதி: திடீரெனப் பரவிய காட்டுத்தீ; தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டதா?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயத்தில் திடீரென காட்டுத்தீ எரிந்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் சாம்பல் நில அணில்கள் சரணாலயத்தையும், மேகமலை புலிகள் சரணாலயத்த... மேலும் பார்க்க