செய்திகள் :

சதுரகிரி மலையில் வேகமாய் பரவும் காட்டுத்தீ; பக்தர்கள் செல்ல தடை; தீயை அணைக்கப் போராடும் வனத்துறை

post image

விருதுநகர் மாவட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

4 பக்கமும் மலைகள் சூழ்ந்துள்ள இந்தக் கோயில் பகுதி அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. சித்தர்கள் வாழும் பூமியாக அறியப்படும் இந்த மலையில் உள்ள சிவனை வழிபட இந்தக் கோயிலுக்கு, மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவின் படி காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரைதான் அனுமதி வழங்கப்படும். மேலும் மலையின் மேல் இரவில் யாரும் தங்க அனுமதி கிடையாது.

காட்டுத்தீ
காட்டுத்தீ

இந்தக் கோயிலுக்குச் செல்லும் பாதையானது வத்திராயிருப்பு வனச்சரகத்திற்குட்பட்ட சதுரகிரி மலைப்பகுதியில் பீட் 4 -ல் உள்ளது. அங்கே 2வது நாளாக காட்டுத் தீ வேகமாய் பரவி வருகிறது. 20க்கும் மேற்பட்ட வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காற்றின் வேகம் அதிகமாகக் காணப்படுவதால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சதுரகிரி மலைப் பகுதியில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருவதால் பக்தர்கள் இன்று கோவிலுக்குச் செல்ல வனத்துறை சார்பாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயிலுக்கு வருகை தந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

ராமேஸ்வரம்: சரக்கு வாகனம் - ஆட்டோ மோதல்; விபத்தில் ஓட்டுநர்கள் இருவர் உயிரிழந்த சோகம்..

ராமேஸ்வரம் ஏர்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது நண்பர்கள் மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன் மற்றும் அகஸ்தியன். ஆட்டோ ஓட்டுநர்களான இவர்கள் மூவரும் மாதேஸ்வரனுக்கு சொந்தமான ஆட்டோவிற்கு தரச்சா... மேலும் பார்க்க

மார்த்தாண்டம்: பைக் விபத்தில் 2 மாணவர்கள் பலி, போராட்டம்.. யார் காரணம்? - போலீஸார் சொல்வது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு பஸ் மற்றும் பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தேங்காய்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த அஜ்மல், அப்சல் ஆகிய இரண்டு... மேலும் பார்க்க

அறுந்து விழுந்த மின்சாரக் கம்பி; கூட்ட நெரிசலில் பக்தர்கள் 2 பேர் பலி.. உத்தரப்பிரதேசத்தில் சோகம்

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பராபங்கியின் அவ்சனேஷ்வர் கோயிலில் இன்று அதிகாலைமுதலே கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் இருந்தப் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்திருக்கின்றன... மேலும் பார்க்க

உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ்கர் சிங் விளக்கம்

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரின் சிவாலிக் மலைகளில் உள்ள பில்வா பர்வத்தின் உச்சியில் மான்சா தேவி கோயில் அமைந்திருக்கிறது. சுமார் 1.5 கிமீ மலை மீது ஏற மலைப்பாதை, படிகட்டுகள், ரோப்வே வழியாகக் கோயிலை அடை... மேலும் பார்க்க

முதுகுளத்தூர்: டிராக்டர் கவிழ்ந்து 3 பெண்கள் பலி; ரேஷன் பொருள்கள் வாங்கி வரும் போது நடந்த சோகம்..

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது கூவர் கூட்டம் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 80 குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் நியாயவிலை கடை இல்லாத நிலையில் அருகில் உள்ள சின்ன பொதிகுளம் கிராமத... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதி: திடீரெனப் பரவிய காட்டுத்தீ; தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டதா?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயத்தில் திடீரென காட்டுத்தீ எரிந்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் சாம்பல் நில அணில்கள் சரணாலயத்தையும், மேகமலை புலிகள் சரணாலயத்த... மேலும் பார்க்க