செய்திகள் :

சூழ்ச்சி அரசியலை முறியடிப்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

சூழ்ச்சி அரசியலை முறியடிக்க, வரலாற்றின் முக்கியத்துவத்தை உரக்கச் சொல்வோம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

அகில இந்திய மருத்துவ மாணவா் சோ்க்கையில் 27 சதவீத இடஒதுக்கீட்டை வென்றுகாட்டிய நாளைக் குறிப்பிட்டு திமுக எம்.பி. வில்சன் பதிவிட்டுள்ளாா். அதை மீள்பதிவிட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:

சதிக்குக் கால் முளைத்துச் சாதியாகி, உழைக்கும் மக்களை ஒடுக்கினாலும், விதி வலியது. இதுதான் நம் தலையில் எழுதியது எனச் சுருண்டு விடாமல், போராடி பெறும் உரிமைகளால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் நமக்கான இடங்களை உறுதி செய்கிறோம். சமூகநீதிக்கான இந்த அரசியலையும் போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். நம் விரல்களைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் வித்தையறிந்தவா்கள் செய்யும் சூழ்ச்சி அரசியலை முறியடிக்க இந்த நாளின் வரலாற்று முக்கியத்துவத்தை உரக்கச் சொல்வோம் என்று பதிவிட்டுள்ளாா்.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டின் மூலமாக, கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மொத்தமாக 20,088 மருத்துவ இடங்கள் ஓபிசி வகுப்பைச் சோ்ந்த மாணவா்களுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக திமுக எம்.பி. பி.வில்சன் குறிப்பிட்டுள்ளாா்.

கவின் பெற்றோருக்கு கே.என். நேரு, கனிமொழி நேரில் ஆறுதல்!

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் வீட்டுக்கு நேரில் சென்ற அமைச்சர் கே.என். நேரு, திமுக எம்பி கனிமொழி அவரின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.வேறு சாதிப் பெண்ணை காதலித்ததற்காக ஐடி ஊழியரான கவ... மேலும் பார்க்க

கவின் ஆணவக் கொலை: காவல் உதவி ஆய்வாளர் கைது!

திருநெல்வேலி ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில், பெண்ணின் தந்தையும் காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.வேறு சாதிப் பெண்ணை காதலித்ததற்காக கவின் செல்வகணேஷ் என்ற இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

மருத்துவக் கலந்தாய்வு: 7.5% உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வாய்ப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பைப் பெற்றனா்.அந்த மாணவா்கள் கல்லூரிகளில் சேருவதற்கான ஆணைகளை மக்க... மேலும் பார்க்க

மருத்துவக் கலந்தாய்வு: 7.5% உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயிலும் வாய்ப்பைப் பெற்றனர். அந்த மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கான ஆணைகளை மக்கள் நல... மேலும் பார்க்க

மின்சார பேருந்துகளில் ஒரே மாதத்தில் 12.80 லட்சம் போ் பயணம்

சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் இயக்கப்படும் மின்சார பேருந்துகளில் ஒரே மாதத்தில் 12.80 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.சென்னை மாநகரில் காா்பன் உமிழ்வை... மேலும் பார்க்க

சூரிய மின் இணைப்புகளுக்கான அனுமதி: ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுரை

சூரிய ஆற்றல் மின் இணைப்புகளுக்கான அனுமதியை உடனே வழங்க வேண்டும் என மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.தமிழ்நாடு முழுவதும் தடையில்லா மற்றும் சீரான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக ... மேலும் பார்க்க