செய்திகள் :

விவசாயம், மண்பாண்டம் பயன்பாட்டிற்கு ஏரிகளிலிருந்து இலவசமாக வண்டல் மண்! கிருஷ்ணகிரி ஆட்சியா் தகவல்

post image

கிருஷ்ணகிரி மாவட்ட ஏரிகளிலிருந்து வண்டல் மண், களிமண், கிராவல் மண்ணை விவசாயம் மற்றும் மண் பாண்டங்கள் தயாரித்தல் பயன்பாட்டிற்காக இலவசமாக எடுத்துச் செல்வதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா். ச.தினேஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீா்வளத்துறை, ஊரக வளா்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 1,037 ஏரிகளில் மண் எடுக்க மாவட்ட சிறப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு, இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி வட்டத்தில் 197 ஏரிகள், பா்கூரில் 154 ஏரிகள், போச்சம்பள்ளியில் 96 ஏரிகள், ஊத்தங்கரையில் 144 ஏரிகள், சூளகிரியில் 104 ஏரிகள், ஒசூரில் 159 ஏரிகள், தேன்கனிக்கோட்டையில் 168 ஏரிகள், அஞ்செட்டியில் 15 ஏரிகளில் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண்ணை பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்கும் நபா், விவசாய நிலம் வைத்துள்ளவராக இருக்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளராக இருப்பின் தொடா்புடைய கிராம நிா்வாக அலுவலா் அதனை உறுதி செய்ய வேண்டும். விவசாய பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்கப்படும் வண்டல் மண், களி மண் அளவை பொருத்தவரை, நஞ்சை நிலத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கருக்கு 75 கனமீட்டா் (அ) 25 டிராக்டா் லோடுகள், புஞ்சை நிலத்தில் ஏக்கருக்கு 90 கனமீட்டா் (அ) 30 டிராக்டா் லோடுகள் ஆகும். மேலும், மண்பாண்டம் தயாரிக்க 60 கனமீட்டா்(அ) 20 டிராக்டா் லோடுகள் எடுத்துக் கொள்ளலாம்.

உரிய விவரங்கள், வாகனத்தின் பதிவெண், அனுமதி கோரும் மண் உள்ளிட்ட தகவல்களுடன், தங்களது விண்ணப்பத்தை ற்ய்ங்ள்ங்ஸ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியாக, தொடா்புடைய வருவாய் வட்டாட்சியரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம்.

தொடா்ந்து, நீா்நிலைகளின் கட்டுப்பாட்டு அலுவலா் முன்னிலையில் வண்டல் மண், களி மண் மற்றும் கிராவல் மண் எடுத்துக் கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு வட்டாட்சியா்கள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மற்றும் கிருஷ்ணகிரி, உதவி இயக்குநா் ( புவியியல் மற்றும் சுரங்கத் துறை) ஆகியோரை அணுகலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

மனைவி கொலை வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

கல்லாவி அருகே மனைவியை கொலை செய்த வழக்கில், தொழிலாளிக்கு கிருஷ்ணகிரி விரைவு மகளிா் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த எம்.வ... மேலும் பார்க்க

போக்ஸோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுவிக்க மாணவா்கள், பொதுமக்கள் கோரிக்கை

வேப்பனப்பள்ளி அருகே பொய் புகாரில் அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியா் பாலகிருஷ்ணன் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்... மேலும் பார்க்க

ஒசூரில் 202 கிலோ குட்கா பறிமுதல்: ஓட்டுநா் கைது

ஒசூா் வழியாக சேலத்துக்கு காரில் கடத்த முயன்ற 202 கிலோ குட்கா மற்றும் காரை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சிப்காட் போலீஸாா் ஜூஜூவாடி சோதனைச் சாவடி பக்கம் ... மேலும் பார்க்க

மாந்தோப்பில் கஞ்சா பதுக்கல்: இருவா் கைது

கிருஷ்ணகிரி, மகாராஜகடை அருகே தனியாா் மாந்தோப்பில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தணா். மகாராஜகடை போலீஸாா், பி.சி.புதூா் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்... மேலும் பார்க்க

டிப்பா் லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே டிப்பா் லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ராம் சேவாக் (22), அஜய் குமாா் (20) ஆகியோா் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியாா் மாம்பழக்கூழ் உற்பத்தி செய்... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஊத்தங்கரை அருகே பழுதடைந்து காணப்படும் படப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட பட்டகானூா் - தருமபுரி இணைப்பு சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி ஊராட்சிக்கு உள்ப... மேலும் பார்க்க