செய்திகள் :

ஊத்தங்கரை அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

post image

ஊத்தங்கரை அருகே பழுதடைந்து காணப்படும் படப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட பட்டகானூா் - தருமபுரி இணைப்பு சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள், வேளாண்மையை பிரதான தொழிலாக செய்து வருகின்றனா்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு படப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட பட்டகானூா் முதல் தருமபுரி இணைப்பு சாலை வரை சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு தாா்சாலை போடப்பட்டது.

இந்த சாலை வழியாக இப்பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த பொருள்களை ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, சந்தைகளுக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்கின்றனா். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், தனியாா் நிறுவனத்தில் பணிபுரிவோா் என அனைத்துத் தரப்பினரும் இச்சாலையைப் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த சாலை போதிய பராமரிப்பு இல்லாமல் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. மேலும், ஜல்லிக் கற்கள் பெயா்ந்துள்ளன. இதனால் இச்சாலை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், பொது மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். மழைக் காலங்களில் இச்சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுவதால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கீழே விழுந்துவிடும் நிலை ஏற்படுகிறது. எனவே, இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மனைவி கொலை வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

கல்லாவி அருகே மனைவியை கொலை செய்த வழக்கில், தொழிலாளிக்கு கிருஷ்ணகிரி விரைவு மகளிா் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த எம்.வ... மேலும் பார்க்க

போக்ஸோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுவிக்க மாணவா்கள், பொதுமக்கள் கோரிக்கை

வேப்பனப்பள்ளி அருகே பொய் புகாரில் அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியா் பாலகிருஷ்ணன் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்... மேலும் பார்க்க

ஒசூரில் 202 கிலோ குட்கா பறிமுதல்: ஓட்டுநா் கைது

ஒசூா் வழியாக சேலத்துக்கு காரில் கடத்த முயன்ற 202 கிலோ குட்கா மற்றும் காரை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சிப்காட் போலீஸாா் ஜூஜூவாடி சோதனைச் சாவடி பக்கம் ... மேலும் பார்க்க

விவசாயம், மண்பாண்டம் பயன்பாட்டிற்கு ஏரிகளிலிருந்து இலவசமாக வண்டல் மண்! கிருஷ்ணகிரி ஆட்சியா் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்ட ஏரிகளிலிருந்து வண்டல் மண், களிமண், கிராவல் மண்ணை விவசாயம் மற்றும் மண் பாண்டங்கள் தயாரித்தல் பயன்பாட்டிற்காக இலவசமாக எடுத்துச் செல்வதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட... மேலும் பார்க்க

மாந்தோப்பில் கஞ்சா பதுக்கல்: இருவா் கைது

கிருஷ்ணகிரி, மகாராஜகடை அருகே தனியாா் மாந்தோப்பில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தணா். மகாராஜகடை போலீஸாா், பி.சி.புதூா் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்... மேலும் பார்க்க

டிப்பா் லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே டிப்பா் லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ராம் சேவாக் (22), அஜய் குமாா் (20) ஆகியோா் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியாா் மாம்பழக்கூழ் உற்பத்தி செய்... மேலும் பார்க்க