செய்திகள் :

சென்னை: ரயில் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு - சிசிடிவி-யைப் பார்த்ததும் அடையாளம் கண்ட போலீஸ்!

post image

சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் ரோஸி (40) இவர், சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். பணி முடிந்து நேற்று மாலை வீட்டுக்குச் செல்ல பெருங்குடி ரயில் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது ரோஸியின் அருகே இளைஞர் ஒருவர் வந்தார். அவர் ரோஸி அமர்ந்திருந்த இருக்கையில் மேடம் இங்கு நான் உட்காரலாமா என மரியாதையாக கேட்டார். அதற்கு ரோஸி, எந்த பதிலும் சொல்லவில்லை. அதன்பிறகு ரோஸியின் அருகே அமர்ந்த அந்த இளைஞர், அவரிடம் ரயில் குறித்த தகவலை கேட்டார். அற்கும் ரோஸி எந்த பதிலும் சொல்லவில்லை.

சௌந்தர்

இளைஞரின் பேச்சு, நடவடிக்கையில் சந்தேகமடைந்த ரோஸி அங்கிருந்து செல்ல முடிவு செய்தார். அப்போது திடீரென ரோஸி அணிந்திருந்த செயினை பறித்த இளைஞர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். திருடன், திருடன் என ரோஸி சத்தம் போட செயின் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் ஓடிய இளைஞனை சிலர் விரட்டினர். ஆனால் அவனைப் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து ரோஸி, திருவான்மியூர் ரயில்வே போலீஸாரிடம் புகாரளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது இளைஞரைப் பார்த்த காவலர் ஒருவர், இவனைப் பார்த்தா செயின் பறிப்பு கொள்ளையன் சௌந்தர் மாதிரி இருக்கிறது என்று கூறினார்.

உடனே சௌந்தரின் பின்னணியை விசாரித்ததோடு அவன் தற்போது எங்கு இருக்கிறான் என போலீஸார் விசாரித்தனர். செயின் பறிப்பு சம்பவத்தில் கைதாகி சிறைக்குச் சென்ற சௌந்தர், தற்போது ஜாமீனில் வெளியிலிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சௌந்தரைப் பிடித்து போலீஸார் விசாரித்தபோது ரோஸியிடம் மூன்று சரவன் தங்கச் செயினைப் பறித்ததை ஒப்புக் கொண்டான். இதையடுத்து சௌந்தரை போலீஸார் கைது செய்தனர்.அதோடு அவனிடமிருந்த செயினையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மீட்கப்பட்ட செயின்

இதுகுறித்து திருவான்மியூர் போலீஸார் கூறுகையில், ``செயின் பறிப்பில் ஈடுபட்ட சௌந்தர் மீது ஏற்கெனவே மறைமலைநகரில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. விழுப்புரத்தைச் சேர்ந்த சௌந்தர் மீன்வியாபாரம் செய்து வந்திருக்கிறார். இவரின் மனைவி பிரிந்துச் சென்ற பிறகு வேலைக்கு எதுவும் செல்லாமல் ஊரைச் சுற்றி வந்திருக்கிறார். வருமானத்துக்காக செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்களில் சௌந்தர் ஈடுபட்டு வருகிறார். இவர், ரயில் நிலையங்களில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிட்டு அவர்களிடம் பேச்சு கொடுப்பார். அப்போது பெண்களின் கவனத்தை திசை திருப்பி செல்போன், செயினைப் பறித்துச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். சௌந்தரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

`நெல்லை கவின் ஆணவக்கொலை' - எவிடென்ஸ் அமைப்பு ஆய்வறிக்கை சொல்வதென்ன?

"நான்கு வெட்டுகளிலேயே கவினுக்கு உயிர் போயிருக்கிறது, கூலிப்படையினரைப்போல அவனது அரிவாள் வெட்டு இருந்திருக்கிறது. அப்படியென்றால் இது திட்டமிடப்பட்ட கூட்டாக சதி செய்த படுகொலையாகவே தெரிகிறது." என்று எவிடெ... மேலும் பார்க்க

தலைக்கேறிய மது போதை; இளைஞரைக் கொன்று எரித்த நண்பர்கள்... கோவையில் அதிர்ச்சி!

மதுரை மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் சுரேஷ்குமார் (28). இவர் கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது நண்பர்களான ரகுபதி (24), முத... மேலும் பார்க்க

சென்னை: ஆட்டோ டிரைவர் கொலை - உறவினர் உட்பட 3 பேர் கைது!

சென்னை, தண்டையார்பேட்டை, கும்மாளம்மன் கோயில் தெருவில் வசித்தவர் அருண்மொழி (31). இவர் ஆட்டோ டிரைவராக இருந்தார். கடந்த 29.07.2025-ம் தேதி தண்டையார்பேட்டை, முண்ட கண்ணியம்மன் கோயில் அருகே அருண்மொழி நின்று... மேலும் பார்க்க

Meghalaya Honeymoon Horror: திரைப்படமாகும் மேகாலயா தேனிலவு கொடூரம்!

மேகாலயாவில் கடந்த மே மாதம் தேனிலவுக்கு சென்ற ராஜா ரகுவன்சியை அவரது மனைவி தனது காதலன் துணையோடு அடியாட்களை வைத்து கொலை செய்தார். இப்படுகொலை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய பிரதேச மா... மேலும் பார்க்க

சென்னை கல்லூரி மாணவன் கார் ஏற்றி கொலை - திமுக பிரமுகர் தனசேகரனின் பேரன் கைது பின்னணி

சென்னை, அயனாவரம், முத்தம்மன் தெருவைச் சேர்ந்தவர், நித்தின் சாய் ( 20). இவர், மயிலாப்பூரில் உள்ள தனியார் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்து வந்தார். இவரின் நண்பன், அயனாவரம் பி.இ., கோய... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை கொடுத்த தாத்தா; எட்டி உதைத்துத் தள்ளிய பேத்திகள்; போக்சோ வழக்கில் முதியவருக்குச் சிறை

சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த பெண்ணுக்கு 19 வயதிலும் 11 வயதிலும் இரண்டு மகள்கள். கணவர் வெளிநாட்டில் வேலை செய்ததால் 74 வயதான மாமனாரும் அந்த வீட்டில் வசித்து வந்தார்.கைதுதினமும் ... மேலும் பார்க்க