செய்திகள் :

US tariff: இந்தியா மீது ட்ரம்ப் விதித்த 25% வரி; என்னென்ன துறைகள் பாதிக்கும்; எதற்கு பாதிப்பு இல்லை?

post image

நேற்று இந்தியா மீது 25 சதவிகித வரி பிளஸ் ரஷ்யா உடன் வர்த்தகம் செய்வதற்கு அபராதம் விதித்துள்ளது அமெரிக்கா.

இந்த வரி நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.

இந்த வரி குறித்து இந்தியா என்ன சொல்கிறது?

இந்த வரி குறித்து இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், "இந்தியா, அமெரிக்கா அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையை கவனமாக ஆய்வு செய்து வருகிறது.

இந்தியா - அமெரிக்கா
இந்தியா - அமெரிக்கா

நியாயமான மற்றும் சீரான வர்த்தகத்திற்கு பேச்சுவார்த்தையை இந்தியாவும், அமெரிக்காவும் கடந்த சில மாதங்களாக நடத்தி வந்தது. இதில் இந்தியா உறுதியாக உள்ளது.

மேலும், இந்திய அரசு அதன் நாட்டின் நலனை பாதுகாப்பதிலும், அதன் விவசாயிகள், சிறு, குறு, நடுத்தர பிசினஸ்கள், தொழிமுனைவோர்களின் நலனை காப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது.

அதனால், நாட்டின் நலனைக் காக்க என்ன செய்ய வேண்டுமோ, இங்கிலாந்து உடனான வர்த்தகத்திற்கு இந்தியா என்ன செய்ததோ, அதை மீண்டும் செய்யும்" என்று கூறியுள்ளது.

இந்த வரி விதிப்பின் மூலம் இந்தியாவின் என்னென்ன துறைகள் பாதிக்கப்படும், பாதிக்கப்படாது என்பதைப் பார்ப்போம்.

எந்தெந்த துறைகள் பாதிக்கப்படும்?

ஆட்டோமொபைல், ஆட்டோமொபைல் தயாரிப்பு பொருள்கள், ஸ்டீல், அலுமினியம், ஸ்மார்ட் போன்கள் அல்லது எலெக்ட்ரானிக்ஸ், சோலார் சம்பந்தப்பட்ட பொருள்கள், டெக்ஸ்டைக்ஸ், தோல் பொருள்கள், கடல் பொருள்கள், கற்கள் மற்றும் நகைகள், ஒரு சில உணவு மற்றும் விவசாயப் பொருள்கள் ஆகிய பொருள்கள் மீது 25 சதவிகிதவரி விதிக்கப்படும்.

ட்ரம்ப்

விதிவிலக்கான துறைகள்

மருந்துப்பொருள்கள், செமி கண்டக்டர்கள், அரிய மற்றும் முக்கிய கனிமங்களுக்கு ஆகிய விலக்கப்பட்ட பொருள்கள் மீது எத்தனை சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது என்பது தற்போதைக்கு தெரியவில்லை. இந்தத் துறைகளிலும் இந்தியா மீது வரி விதிக்கப்பட்டால், இது இந்தியாவிற்கு மிகப்பெரிய பின்னடைவை தரும்.

US tariff: `ட்ரம்ப் விதித்த 25% வரி; இந்திய பங்குச்சந்தையில் ஏற்படும் தாக்கம்' - விளக்கும் நிபுணர்

'நினைவில் கொள்ளுங்கள்... இந்தியா நமது நண்பனாக இருக்கும்போது...' என்று தனது சமூக வலைதள போஸ்டை ஆரம்பித்து, இந்தியா மீது 25 சதவிகித வரியைப் போட்டு தீட்டியிருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இது இந்தியாவில... மேலும் பார்க்க

``காங்கிரஸ் தான் தீவிரவாதத்திற்கு காரணம்; அப்சல் குருவை ஏன் தூக்கிலிடவில்லை?'' - அமித்ஷா கேள்வி

நேற்று மாநிலங்களவையில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது,பாகிஸ்தானை இந்தியா எப்படி வழிக்கு கொண்டு வந்தது? "நாம் ப... மேலும் பார்க்க

`சாதிவாரி கணக்கெடுப்பு, இட ஒதுக்கீடு' -மனம் திறந்த ராகுல், காங்கிரஸ் செய்த தவறுகள் என்ன? | In Depth

கடந்த 26-ம் தேதி தெலங்கானாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் OBC மாநாடு நடந்தது. அதில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, ``என் 21 வருட அரசியல் வாழ்க்கையில் ஏழைகள், எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மையினர், பெண்கள... மேலும் பார்க்க

Doctor Vikatan: மலையேறும்போது மாரடைப்பு; யாருக்கு ரிஸ்க் அதிகம், தவிர்க்க முடியுமா?

Doctor Vikatan: பொழுதுபோக்காக டிரெக்கிங் செல்வோர், ஆன்மிகப் பயணங்களுக்காக மலைக்கோயில்களுக்குச் செல்வோர் பலர் இருக்கிறார்கள். இப்படிச் செல்வோரில் சிலர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த செய்திகளைஅடி... மேலும் பார்க்க

CM Stalin: சிகிச்சைக்குப் பிறகு தலைமைச் செயலகம் வரும் முதல்வர் ஸ்டாலின்; 3-ம் தேதி அடுத்தப் பயணம்?

தலைமை செயலகம் வரும் முதல்வர் ஸ்டாலின்:கடந்த 21-ம் தேதி காலை நடைபயிற்சியின் போது முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. ஆனாலும் அவர் அறிவாலயத்திற்கு வந்து கட்சி பணிகளை மேற்கொண்டார். அப்போத... மேலும் பார்க்க

``எடப்பாடி பழனிச்சாமி மக்களால் தேர்ந்தெடுத்து முதல்வர் ஆகவில்லை'' - அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்கல்வி வழிகாட்டுதல்களுக்காக மாணவர் சிறப்பு குறை தீர்வு முகாம் மற்றும் திண்டுக்கல் கல்வி அறக்கட்டளை மூலம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்ச... மேலும் பார்க்க