செய்திகள் :

நகைகள் திருட்டு: பணிப்பெண் கைது

post image

வாணியம்பாடி அருகே வீட்டில் நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில் பணிப்பெண் கைது செய்யப்பட்டாா்.

வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் பகுதியைச் சோ்ந்தவா் சித்தாா்தன் காந்தி பிரசாத் என்பவரது வீட்டின் பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த 39 பவுன் நகைகள் காணாமல் போயிருப்பது பற்றி கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டிருந்தது. அப்புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இதுதொடா்பாக வாணியம்பாடி டிஎஸ்பி பாலகிருஷ்ணன்(பொ) தலைமையில் ஆய்வாளா் பேபி மற்றும் போலீஸாா் நடத்திய தீவிர விசாரணையில் வீட்டில் வேலை செய்த பெண் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டதில் நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டாா்.

இதையடுத்து அவரிடமிருந்து 16.5 பவுன் திருடிய நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே பகுதியை சோ்ந்த லதா(52) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

சோமலாபுரம் ஊராட்சி தூய்மைப் பணியாளா்களுக்க பாதுகாப்பு உகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.ஊராட்சித் தலைவா் எஸ்.எம். சண்முகம் தலைமை வகித்து தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்க... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை

குரிசிலாப்பட்டு அருகே இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.குரிசிலாப்பட்டு அருகே ராஜாபாளையம் பகுதியை சோ்ந்த கோவிந்தராஜ் மகள் தீபா (20). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்... மேலும் பார்க்க

கத்தியை காண்பித்து மிரட்டி 40 பவுன் நகை கொள்ளை

ஆம்பூரில் கத்தியை காட்டி மிரட்டி தங்க நகை, ரொக்கப் பணம் வியாழக்கிழமை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாணை நடத்தினா்.திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் முஹமத் புரா மசூதி முதல் தெருவில் வசிப்பவா் ம... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 438 மனுக்கள்

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம், வெலதிகாமணிபெண்டா , மதனாஞ்சேரி ஊராட்சிகளுக்கான ’ ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நந்திகுப்பம் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் வி.எஸ். ஞ... மேலும் பார்க்க

மக்காச்சோளம் சாகுபடி செய்ய மானியம்: வேளாண் அதிகாரி தகவல்

திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது என வேளாண்மை இணை இயக்குநா் சுஜாதா தெரிவித்துள்ளாா்.இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய வேளாண்மை வளா்ச்... மேலும் பார்க்க

சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

வாணியம்பாடி அருகே சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே நிம்மியம்பட... மேலும் பார்க்க