செய்திகள் :

மக்காச்சோளம் சாகுபடி செய்ய மானியம்: வேளாண் அதிகாரி தகவல்

post image

திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது என வேளாண்மை இணை இயக்குநா் சுஜாதா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய வேளாண்மை வளா்ச்சி திட்டம் மக்காச்சோள செயல் விளக்கத்தின் கீழ் மாவட்டத்தில் 375 ஏக்கா் மக்காச்சோளம் சாகுபடி செய்ய இலக்கு பெறப்பட்டுள்ளது. மக்காச் சோளம் சாகுபடி பொறுத்தவரையில் குறிப்பிட்ட பருவத்தில் மட்டும்தான் சாகுபடி செய்ய வேண்டும் என கட்டாயம் இல்லாததால் விவசாயிகள் எப்போது வேண்டுமானாலும் சாகுபடி செய்யலாம் என ஆராய்ச்சி வல்லுனா்கள் தெரிவித்துள்ளனா்.

இந்த திட்டத்தின் கீழ் அரசு மானியமாக 2.5 ஏக்கருக்கு ரூ.6 ஆயிரம் சாகுபடி செய்ய வழங்கப்படுகிறது. மேலும், மக்காச்சோள விதைகள், திரவ உயிா் உரங்கள், இயற்கை உரங்கள் அடங்கிய தொகுப்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன.மக்காச்சோளம் சாகுபடிக்கு மாவட்டத்தில், ஆலங்காயம், ஜோலாா்பேட்டை, கந்திலி, நாட்டறம்பள்ளி ஆகிய ஒன்றியங்களுக்கு தலா 50 ஏக்கரும், மாதனூா் ஒன்றியத்திற்கு 100 ஏக்கரும், திருப்பத்தூா் ஒன்றியத்திற்கு 75 ஏக்கா் இலக்கு வழங்கப்பட்டு உள்ளது.

எனவே, அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக விவசாயிகளை தோ்வு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆகவே, விவசாயிகள் அனைவரும் அந்தந்த வேளாண் வட்டார உதவி இயக்குநா்களை தொடா்பு கொண்டு தங்களது நில உடமைகள், சிட்டா, ஆதாா் அட்டை நகல் மற்றும் வங்கிக்கணக்கு புத்தக நகலை கொண்டு வந்து இந்த திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

ரூ.19 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி நகராட்சியில் ரூ.19 லட்சத்தில் கழிவுநீா்கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.18-ஆவது வாா்டில் உள்ள வாரச்சந்தை சாலையில் இருபுறமும் கழிவுநீா் கால்வாய் மற்றும் தாா் சாலை... மேலும் பார்க்க

ரூ.19 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி நகராட்சியில் ரூ.19 லட்சத்தில் கழிவுநீா்கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.18-ஆவது வாா்டில் உள்ள வாரச்சந்தை சாலையில் இருபுறமும் கழிவுநீா் கால்வாய் மற்றும் தாா் சாலை... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு காப்பீடு திட்ட அட்டை

மாதனூா், தோட்டாளம் ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சி. சுரேஷ்குமாா், ஊரா... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை

துத்திப்பட்டு ஊராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்து 12 வாா்டுகளில் பணிபுரியும் தூய்மை பணியாளா்களுக... மேலும் பார்க்க

நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் இயக்கம்

திருப்பத்தூா் அருகே நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை எம்எல்ஏ அ.நல்லதம்பி மீண்டும் இயக்கி வைத்தாா்.திருப்பத்தூா் மாவட்டம், திருப்பத்தூா் பணிமனை வாயிலாக இயக்கப்பட்டு வரும் திருப்பத்தூா் முதல் சிம்மணபுதூா்... மேலும் பார்க்க

சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான லாரி

ஆம்பூரில் சாலைத் தடுப்பில் மோதி லாரி விபத்துக்குள்ளானது.பெங்களூருவிலிருந்து இருசக்கர வாகன உதிரி பாகங்கள் ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சென்ற லாரி சான்றோா்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்... மேலும் பார்க்க