செய்திகள் :

Doctor Vikatan: மலையேறும்போது மாரடைப்பு; யாருக்கு ரிஸ்க் அதிகம், தவிர்க்க முடியுமா?

post image

Doctor Vikatan: பொழுதுபோக்காக டிரெக்கிங் செல்வோர், ஆன்மிகப் பயணங்களுக்காக மலைக்கோயில்களுக்குச் செல்வோர் பலர் இருக்கிறார்கள். இப்படிச் செல்வோரில் சிலர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம்.  மலை ஏறும்போது மாரடைப்பு வரும் ஆபத்து அதிகமா, யாருக்கு அந்த ரிஸ்க் அதிகம், அதைத் தவிர்க்க வழிகள் உண்டா?

பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன். 

பொழுதுபோக்கவோ, கடவுளை தரிசிக்கவோ இப்படி மலை ஏறிவிட்டு, சடலமாகத் திரும்புவது என்பது ரொம்பவும் துரதிர்ஷ்டசமானது. பொதுவாக தினமும் உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றுவது, சரியான உடல் எடையில் இருப்பது போன்ற விஷயங்களில் கவனமாக இருப்போருக்கு இதுபோன்ற ரிஸ்க் ஏற்படுவதில்லை. 

அடிக்கடி மலை ஏறி பழக்கம் உள்ளவர்களுக்கும் இந்த ரிஸ்க் இருக்காது. அதுவே, மலை ஏறுவதில் எந்த முன் அனுபவமும் இல்லாமல், உடல் அதற்குத் தயாராகாமல் முதல்முறை மலை ஏறுபவர்களுக்குத்தான் இந்த ரிஸ்க் அதிகம்.  அதேபோல, சிலருக்கு ஏற்கெனவே இதயம் தொடர்பான பிரச்னைகள் இருந்திருக்கலாம். அவர்கள் பரிசோதனையே செய்திருக்க மாட்டார்கள். அதனால். அந்தப் பிரச்னை இருப்பதே தெரியாமல் இருப்பார்கள். அந்த நிலையில் அவர்கள் மலை ஏறும்போதும் பிரச்னை வரலாம். மலை ஏறும்போது இதயத்துடிப்பு அதிகமாகி, இதயத்தின் இயக்கமும் அதிகரிக்கும். அதனால் இதயம் சிரமத்துக்குள்ளாகலாம். 

மலையேற்றம்

எனவே, மலையேற்றம் மாதிரி, உங்களுக்கு அறிமுகமில்லாத புதிய செயல்களில் இறங்கும்போது, எந்தத் தயாரிப்புமின்றி அதைச் செய்யாமல், மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதயத்தைப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

டிரெட்மில் டெஸ்ட் என்ற எளிமையான பரிசோதனையே போதுமானது. டிரெட்மில்லில் உங்களை நடக்கவிட்டு, உங்கள் இதயத்துடிப்பு எப்படியிருக்கிறது, ரத்த ஓட்டமும், ஆக்ஸிஜன் அளவும் எப்படியிருக்கிறது என்று கவனிக்கப்படும்.  அதில் எந்தச் சந்தேகமும் பிரச்னையும் இல்லை என்றால், மருத்துவர் உங்களை மலையேற அனுமதிப்பார். ஆனால், அதை உறுதிசெய்யாமல் மலையேற்றத்துக்குத் தயாராக வேண்டாம்.  அப்படியே மலையேறத் தயாரானாலும் அதிக தூரம் மற்றும் நீண்ட நேரம் செல்வதைத் தவிர்த்து, மெள்ள மெள்ள வேகத்தையும் தூரத்தையும் அதிகரிக்கலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     

US tariff: `ட்ரம்ப் விதித்த 25% வரி; இந்திய பங்குச்சந்தையில் ஏற்படும் தாக்கம்' - விளக்கும் நிபுணர்

'நினைவில் கொள்ளுங்கள்... இந்தியா நமது நண்பனாக இருக்கும்போது...' என்று தனது சமூக வலைதள போஸ்டை ஆரம்பித்து, இந்தியா மீது 25 சதவிகித வரியைப் போட்டு தீட்டியிருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இது இந்தியாவில... மேலும் பார்க்க

``காங்கிரஸ் தான் தீவிரவாதத்திற்கு காரணம்; அப்சல் குருவை ஏன் தூக்கிலிடவில்லை?'' - அமித்ஷா கேள்வி

நேற்று மாநிலங்களவையில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது,பாகிஸ்தானை இந்தியா எப்படி வழிக்கு கொண்டு வந்தது? "நாம் ப... மேலும் பார்க்க

US tariff: இந்தியா மீது ட்ரம்ப் விதித்த 25% வரி; என்னென்ன துறைகள் பாதிக்கும்; எதற்கு பாதிப்பு இல்லை?

நேற்று இந்தியா மீது 25 சதவிகித வரி பிளஸ் ரஷ்யா உடன் வர்த்தகம் செய்வதற்கு அபராதம் விதித்துள்ளது அமெரிக்கா. இந்த வரி நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த வரி குறித்து இந்தியா என்ன சொல்கிறது? இந்த வரி குற... மேலும் பார்க்க

`சாதிவாரி கணக்கெடுப்பு, இட ஒதுக்கீடு' -மனம் திறந்த ராகுல், காங்கிரஸ் செய்த தவறுகள் என்ன? | In Depth

கடந்த 26-ம் தேதி தெலங்கானாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் OBC மாநாடு நடந்தது. அதில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, ``என் 21 வருட அரசியல் வாழ்க்கையில் ஏழைகள், எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மையினர், பெண்கள... மேலும் பார்க்க

CM Stalin: சிகிச்சைக்குப் பிறகு தலைமைச் செயலகம் வரும் முதல்வர் ஸ்டாலின்; 3-ம் தேதி அடுத்தப் பயணம்?

தலைமை செயலகம் வரும் முதல்வர் ஸ்டாலின்:கடந்த 21-ம் தேதி காலை நடைபயிற்சியின் போது முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. ஆனாலும் அவர் அறிவாலயத்திற்கு வந்து கட்சி பணிகளை மேற்கொண்டார். அப்போத... மேலும் பார்க்க

``எடப்பாடி பழனிச்சாமி மக்களால் தேர்ந்தெடுத்து முதல்வர் ஆகவில்லை'' - அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்கல்வி வழிகாட்டுதல்களுக்காக மாணவர் சிறப்பு குறை தீர்வு முகாம் மற்றும் திண்டுக்கல் கல்வி அறக்கட்டளை மூலம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்ச... மேலும் பார்க்க