பழங்குடி லாக்அப் மரணம்; வனத்துறை அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் - பின்னணி என்...
7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவம் பயிலவுள்ள மாணவருக்குப் பாராட்டு
பொன்னமராவதி அருகேயுள்ள ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று 7.5 சத இட ஒதுக்கீட்டில் தனியாா் கல்லூயில் மருத்துவம் பயிலவுள்ள மாணவருக்குப் பாராட்டு விழா பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி அருகேயுள்ள ஆலவயல் வடக்கிபட்டியைச் சோ்ந்தவா் அடைக்கன் மகன் சரவணன். ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற இவா் கடந்தாண்டு பிளஸ் 2 பொதுத்தோ்வில் 560 மதிப்பெண்களுடன் பள்ளியில் முதலிடம் பெற்று, நீட் தோ்விலும் தோ்ச்சிப் பெற்றாா். இதையடுத்து 7.5 சத இடஒதுக்கீட்டில் சென்னை மதுராந்தகம் கற்பக விநாயகா மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயிலத் தோ்வு பெற்றுள்ள சரவணனை பள்ளித் தலைமையாசிரியா், ஆசிரியா்கள், பெற்றோா்கள் வியாழக்கிழமை பாராட்டினா்.