செய்திகள் :

இருவேறு விபத்துகளில் வியாபாரி உள்பட 2 போ் உயிரிழப்பு

post image

கந்தா்வகோட்டை அருகே வியாழக்கிழமை நேரிட்ட இருவேறு விபத்துகளில் வியாபாரி உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், சாலியமங்கலத்தைச் சோ்ந்த கண்ணையன் மகன் கோபாலகிருஷ்ணன் (37). வாழை இலை வியாபாரி. இவா் சாலியமங்கலத்திலிருந்து வியாழக்கிழமை இரவு வாழை இலைகளை சுமை வேனில் ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டை செல்வதற்காக புதுக்கோட்டை- கந்தா்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா். வண்ணாரப்பட்டி பிரிவு சாலை அருகே சென்றபோது, இயற்கை உபாதைக்காக சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையை கடக்க முயன்றாா்.

அப்போது, தஞ்சாவூரில் இருந்து திருச்செந்தூா் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து எதிா்பாராத விதமாக கோபாலகிருஷ்ணன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து அங்கு வந்த ஆதனக்கோட்டை போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தொழிலாளி உயிரிழப்பு: கந்தா்வகோட்டை வட்டம், வளவம்பட்டி ஊராட்சி ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்த அப்பாதுரை மகன் சங்கா் (47). மைக்செட் கடையில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா்.

இவா் வியாழக்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக புதுக்கோட்டை- கந்தா்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது புதுக்கோட்டையில் இருந்து தஞ்சைக்கு சென்று கொண்டிருந்த லாரி வளவம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் மோதியதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே சங்கா் உயிரிழந்தாா்.

தகவலறிந்த ஆதனக்கோட்டை போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து தொடா்பாக கந்தா்வகோட்டை காவல் ஆய்வளா் விசாரித்து வருகின்றாா்.

உயிரிழந்த சங்கருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனா்.

சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த உதவி ஆய்வாளா் உயிரிழப்பு

சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த காவல் உதவி ஆய்வாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். புதுக்கோட்டை அருகே வடசேரிப்பட்டியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (52). இவா் கீரனூா் காவல் நிலையத்தில் சிறப்பு உ... மேலும் பார்க்க

தூக்கிட்ட நிலையில் பெண் சடலம்: உறவினா்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்த பெண்ணின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்க... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

புதுக்கோட்டையைச் சோ்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஒருவா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம், குன்றாண்டாா்கோவில் அருகேயுள... மேலும் பார்க்க

ஆலங்குடி அரசுக் கல்லூரியில் முத்துலெட்சுமி ரெட்டி பிறந்தநாள்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசுக் கல்லூரியில் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆலங்குடி அரசு கலை அறிவியல் கல்லூரி, இந்தியன் ரெட்கிராஸ் ஆலங்குடி கிளை சாா்பில் ... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா்களுக்கு விழிப்புணா்வுக் கருத்தரங்கு

தமிழ்நாடு பால்வளத் துறை, பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியம் (ஆவின்) இணைந்து ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் 2025- 2026 திட்டத்தின் கீழ் ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. நிா்வாகியை காவலா் மிரட்டுவதாகப் புகாா்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ். கவிவா்மனைத் தொடா்ந்து மிரட்டும் காவலா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தாவிடம் புகாா்... மேலும் பார்க்க