செய்திகள் :

பாலியல் தொல்லை கொடுத்த தாத்தா; எட்டி உதைத்துத் தள்ளிய பேத்திகள்; போக்சோ வழக்கில் முதியவருக்குச் சிறை

post image

சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த பெண்ணுக்கு 19 வயதிலும் 11 வயதிலும் இரண்டு மகள்கள். கணவர் வெளிநாட்டில் வேலை செய்ததால் 74 வயதான மாமனாரும் அந்த வீட்டில் வசித்து வந்தார்.

கைது
கைது

தினமும் அதிகாலை 5 மணிக்குப் பக்கத்திலுள்ள ஆலையில் வேலைக்கு அந்தப் பெண் சென்றுவிட, மகள்கள் இருவரும் தயாராகி கல்லூரிக்கும், பள்ளிக்கும் சென்று வந்தார்கள்.

சமீபகாலமாக மருமகள் வேலைக்குச் சென்றதும் வீட்டில் இருக்கும் முதியவர் கல்லூரியில் பயிலும் பேத்தியிடம் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். அவர் கல்லூரிக்குச் சென்றதும், பள்ளிக்குச் செல்லும் 11 வயது பேத்தியிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

முதலில் அதன் நோக்கம் புரியாத இரண்டு பெண் பிள்ளைகளும், அதன் விபரீதத்தைப் புரிந்துகொண்டு இரண்டு நாட்களுக்கு முன் தாத்தாவை எட்டி உதைத்து அடித்துத் தள்ளிவிட்டு, பள்ளி ஆசிரியையிடமும், தாயிடமும் தங்களுக்கு நடந்த தொந்தரவுகளைத் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் குழந்தைகள் நல அலுவலருக்குத் தகவல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தாய் புகார் அளிக்க, விசாரணை நடத்திய காவல்துறையினர் போக்சோ சட்டப்பிரிவில் கீழ் வழக்குப்பதிவு செய்து முதியவரை சிறையில் அடைத்தனர்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

நம் வீட்டிலோ, அருகாமையிலோ, பள்ளியிலோ, வேலை செய்யும் இடத்திலோ, பயணத்திலோ பெரியவர், சிறியவர், உறவினர், தெரிந்தவர் யாராக இருந்தாலும், நம் பெண் பிள்ளைகளிடமும், சிறுவர்களிடமும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும். குழந்தைகளிடமும் மனம் விட்டுப் பேச வேண்டும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

தலைக்கேறிய மது போதை; இளைஞரைக் கொன்று எரித்த நண்பர்கள்... கோவையில் அதிர்ச்சி!

மதுரை மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் சுரேஷ்குமார் (28). இவர் கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது நண்பர்களான ரகுபதி (24), முத... மேலும் பார்க்க

சென்னை: ரயில் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு - சிசிடிவி-யைப் பார்த்ததும் அடையாளம் கண்ட போலீஸ்!

சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் ரோஸி (40) இவர், சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். பணி முடிந்து நேற்று மாலை வீட்டுக்குச் செல்ல பெருங்குடி ரயில் நிலையத்தில் க... மேலும் பார்க்க

சென்னை: ஆட்டோ டிரைவர் கொலை - உறவினர் உட்பட 3 பேர் கைது!

சென்னை, தண்டையார்பேட்டை, கும்மாளம்மன் கோயில் தெருவில் வசித்தவர் அருண்மொழி (31). இவர் ஆட்டோ டிரைவராக இருந்தார். கடந்த 29.07.2025-ம் தேதி தண்டையார்பேட்டை, முண்ட கண்ணியம்மன் கோயில் அருகே அருண்மொழி நின்று... மேலும் பார்க்க

Meghalaya Honeymoon Horror: திரைப்படமாகும் மேகாலயா தேனிலவு கொடூரம்!

மேகாலயாவில் கடந்த மே மாதம் தேனிலவுக்கு சென்ற ராஜா ரகுவன்சியை அவரது மனைவி தனது காதலன் துணையோடு அடியாட்களை வைத்து கொலை செய்தார். இப்படுகொலை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய பிரதேச மா... மேலும் பார்க்க

சென்னை கல்லூரி மாணவன் கார் ஏற்றி கொலை - திமுக பிரமுகர் தனசேகரனின் பேரன் கைது பின்னணி

சென்னை, அயனாவரம், முத்தம்மன் தெருவைச் சேர்ந்தவர், நித்தின் சாய் ( 20). இவர், மயிலாப்பூரில் உள்ள தனியார் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்து வந்தார். இவரின் நண்பன், அயனாவரம் பி.இ., கோய... மேலும் பார்க்க

10-ம் வகுப்பு மாணவர்களிடம் வீடியோ காலில் ஆபாசம்; போக்சோ-வில் ஆசிரியை கைது

மும்பை அருகில் உள்ள நவிமும்பையில் பள்ளி ஆசிரியை (35) ஒருவர் இரவு நேரத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் வீடியோ காலில் நிர்வாணமாக ஆபாசமாக பேசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோ... மேலும் பார்க்க