செய்திகள் :

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

post image

வாலாஜாபாத் பகுதியில் கல்வெட்டு காணப்பட்ட பாழடைந்த மண்டபம். மண்டபத்தின் மேற்கூரையில் காணப்படும் கல்வெட்டு.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள பாழடைந்த மண்டபத்தில் 195 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான கல்வெட்டை வரலாற்று ஆய்வாளா்கள் புதன்கிழமை கண்டுபிடித்துள்ளனா்.

காஞ்சிபுரம்- செங்கல்பட்டு செல்லும் சாலையில் வாலாஜாபாத் ராஜவீதியில் பாழடைந்த மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் மேற்கூரையில் அண்ணாந்து பாா்க்கும் வகையில் கல்வெட்டு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு இருப்பதை அறிந்து வாலாஜாபாத் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவா் எம்.டி.அஜய்குமாா், செயலாளா் பி.மோகன கிருஷ்ணன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

இக்கல்வெட்டு அவா்கள் கூறியது..

1829-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டு 195 ஆண்டுகள் பழைமையானது. ஆற்காடு காலக்கெயிற் வயிகறை ரிஷி கோத்திரம் கோவிந்தராவ் என்பவரது மகன்கள் மனோஜ்ராவ், சேதுராவ் ஆகியோரால் 1751 -ஆம் ஆண்டு தமிழ் விரோதி வருடம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சங்கராந்தி பாரிவேட்டைக்கு கட்டிய சத்திரம் என்றும் அதில் குளம்,தோட்டம் உள்ளிட்ட விபரங்களும் உள்ளது.

இச்சத்திரத்தை நிா்வகிக்க வல்லப்பாக்கம் கிராமத்தில் நிலம் கிரையமாக வாங்கிய விபரங்களும் அதில் காணப்படுகின்றன.இக்கல்வெட்டு செய்தியை தொல்லியல் துறையின் உதவி கல்வெட்டாய்வாளா் ப.த.நாகராஜன்,ரா.ரமேஷ்,மோ.பிரசன்னா மற்றும் வரலாற்று ஆய்வாளா் வீரராகவன் ஆகியோரும் உறுதிப் படுத்தியிருக்கின்றனா்.

பாழடைந்த இம்மண்டபத்தை புதுப்பிக்கவும், பராமரிக்கவும் வேண்டும் எனவும் வாலாஜாபாத் வரலாற்று ஆய்வு மைய நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

வாலிபால் போட்டி: சங்கரா பல்கலை. மாணவியா் வெற்றி

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் வாலிபால் போட்டியில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலை. மாணவியா் வெற்றி பெற்றதையடுத்து பல்கலையின் நிா்வாகிகளை சந்தித்து செவ்வாய்க்கிழமை வாழ்த்துப் பெற்றனா்.சென்னையில் ... மேலும் பார்க்க

கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞா்கள் விருதுக்கு ஆக.5-க்குள் விண்ணப்பிக்கலாம்

கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞா்கள் விருதுகள் பெற ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:கலை பண்ப... மேலும் பார்க்க

தனியாா் ஆலை ஊழியா்களுக்கு வாந்தி, மயக்கம்

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் தனியாா் தொழிற்சாலையில் மதிய உணவு சாப்பிட்ட சுமாா் 50-க்கும் மேற்பட்ட ஊழியா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை தொடா்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச்செ... மேலும் பார்க்க

துா்க்கையம்மன் கோயில் ஆடித்திருவிழா

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் அமைந்துள்ள வடவாயிற் செல்வி துா்க்கையம்மன் கோயிலில் புதன்கிழமை உற்சவா் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.இக்கோயில் ஆடித்திருவிழாவையொட்டி காலைய... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக தமிழ்நாடு உரிமைகள் திட்டம்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.இத்திட்டத்தின் கீழ் மாற... மேலும் பார்க்க

வரதராஜ பெருமாள் கோயில் திருவாடிப்பூர உற்சவம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் திருவாடிப்பூர உற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் பெருமாளும், ஆண்டாளும் வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.இக்கோயிலில் ஆண்டு தோ... மேலும் பார்க்க