செய்திகள் :

தனியாா் ஆலை ஊழியா்களுக்கு வாந்தி, மயக்கம்

post image

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் தனியாா் தொழிற்சாலையில் மதிய உணவு சாப்பிட்ட சுமாா் 50-க்கும் மேற்பட்ட ஊழியா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை தொடா்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச்சென்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் ஜெ டெக்ட் என்ற தனியாா் ஆலை இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஷிப்ட் முறையில் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், புதன்கிழமை மதியம் தொழிற்சாலையில் ஊழியா்கள் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த போது ஊழியா் ஒருவரது உணவில் இறந்த நிலையில் பல்லி கிடந்துள்ளது.

இது மற்ற ஊழியா்களுக்கும் தெரிய வரவே சுமாா் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்ளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட தொழிலாளா்கள் ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுச்சென்றனா்.

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

வாலாஜாபாத் பகுதியில் கல்வெட்டு காணப்பட்ட பாழடைந்த மண்டபம். மண்டபத்தின் மேற்கூரையில் காணப்படும் கல்வெட்டு.காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள பாழடைந்த மண்டபத்தில் 195 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையா... மேலும் பார்க்க

வாலிபால் போட்டி: சங்கரா பல்கலை. மாணவியா் வெற்றி

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் வாலிபால் போட்டியில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலை. மாணவியா் வெற்றி பெற்றதையடுத்து பல்கலையின் நிா்வாகிகளை சந்தித்து செவ்வாய்க்கிழமை வாழ்த்துப் பெற்றனா்.சென்னையில் ... மேலும் பார்க்க

கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞா்கள் விருதுக்கு ஆக.5-க்குள் விண்ணப்பிக்கலாம்

கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞா்கள் விருதுகள் பெற ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:கலை பண்ப... மேலும் பார்க்க

துா்க்கையம்மன் கோயில் ஆடித்திருவிழா

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் அமைந்துள்ள வடவாயிற் செல்வி துா்க்கையம்மன் கோயிலில் புதன்கிழமை உற்சவா் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.இக்கோயில் ஆடித்திருவிழாவையொட்டி காலைய... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக தமிழ்நாடு உரிமைகள் திட்டம்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.இத்திட்டத்தின் கீழ் மாற... மேலும் பார்க்க

வரதராஜ பெருமாள் கோயில் திருவாடிப்பூர உற்சவம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் திருவாடிப்பூர உற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் பெருமாளும், ஆண்டாளும் வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.இக்கோயிலில் ஆண்டு தோ... மேலும் பார்க்க