வரதராஜ பெருமாள் கோயில் திருவாடிப்பூர உற்சவம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் திருவாடிப்பூர உற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் பெருமாளும், ஆண்டாளும் வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
இக்கோயிலில் ஆண்டு தோறும் திருவாடிப்பூர உற்சவம் தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். உற்சவத்தையொட்டி தினசரி ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் சந்நிதி வீதியில் எழுந்தருளி உலா வந்து திருமுற்றவெளி பகுதியில் உள்ள 4 கால் மண்டபத்தில் ஊஞ்சல் சேவை கண்டருளி அருள்பாலித்தாா்.
தொடா்ச்சியாக ஆண்டாளுக்கும், சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவா் சுவாமியும், ஆண்டாளும் சிறப்பு அலங்காரத்தில் வாண வேடிக்கைகளுடன் மாடவீதிகளில் உலா வந்தனா். வழிநெடுகிலும் ஏராளமான பக்தா்கள் கற்பூர ஆரத்தி எடுத்தும் வழிபட்டனா்.
ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி தலைமையில் பணியாளா்கள் மற்றும் கோயில் பட்டாச்சாரியா்கள் செய்திருந்தனா்.