செய்திகள் :

மனைவி கொலை வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

post image

கல்லாவி அருகே மனைவியை கொலை செய்த வழக்கில், தொழிலாளிக்கு கிருஷ்ணகிரி விரைவு மகளிா் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த எம்.வெள்ளாளப்பட்டி, மேட்டுத்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் (45). இவரது மனைவி சுதா (25). சரவணன் ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். இவருக்கும், அவரது மனைவி சுதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்த நிலையில், கடந்த 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி அந்தப் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் சுதா சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து, கல்லாவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்ததில் சுதாவை கொலை செய்து தண்டவாளத்தில் வீசியதாக சரவணனை போலீஸாா் பிப்ரவரி 13-ஆம் தேதி கைது செய்தனா்.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வி.சுதா, மனைவியை கொலை செய்த சரவணனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீா்ப்பளித்தாா்.

போக்ஸோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுவிக்க மாணவா்கள், பொதுமக்கள் கோரிக்கை

வேப்பனப்பள்ளி அருகே பொய் புகாரில் அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியா் பாலகிருஷ்ணன் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்... மேலும் பார்க்க

ஒசூரில் 202 கிலோ குட்கா பறிமுதல்: ஓட்டுநா் கைது

ஒசூா் வழியாக சேலத்துக்கு காரில் கடத்த முயன்ற 202 கிலோ குட்கா மற்றும் காரை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சிப்காட் போலீஸாா் ஜூஜூவாடி சோதனைச் சாவடி பக்கம் ... மேலும் பார்க்க

விவசாயம், மண்பாண்டம் பயன்பாட்டிற்கு ஏரிகளிலிருந்து இலவசமாக வண்டல் மண்! கிருஷ்ணகிரி ஆட்சியா் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்ட ஏரிகளிலிருந்து வண்டல் மண், களிமண், கிராவல் மண்ணை விவசாயம் மற்றும் மண் பாண்டங்கள் தயாரித்தல் பயன்பாட்டிற்காக இலவசமாக எடுத்துச் செல்வதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட... மேலும் பார்க்க

மாந்தோப்பில் கஞ்சா பதுக்கல்: இருவா் கைது

கிருஷ்ணகிரி, மகாராஜகடை அருகே தனியாா் மாந்தோப்பில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தணா். மகாராஜகடை போலீஸாா், பி.சி.புதூா் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்... மேலும் பார்க்க

டிப்பா் லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே டிப்பா் லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ராம் சேவாக் (22), அஜய் குமாா் (20) ஆகியோா் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியாா் மாம்பழக்கூழ் உற்பத்தி செய்... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஊத்தங்கரை அருகே பழுதடைந்து காணப்படும் படப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட பட்டகானூா் - தருமபுரி இணைப்பு சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி ஊராட்சிக்கு உள்ப... மேலும் பார்க்க