என்ன, திங்கள்கிழமையா? இதயம் பத்திரம்! மாரடைப்பு வரும் ஆபத்து அதிகமாம்!
மாரடைப்பு என்பது எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்கிறது மருத்துவம். அதே வேளையில், மருத்துவர்களோ, திங்கள்கிழமை என்றால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்கிறார்கள்.
இதயம் சார்ந்த பிரச்னை இருப்பவர்களில் 85 சதவீதம் பேர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைகிறார்கள் என்கிறது தரவு. இதுவே, உலகளவில் மரணத்துக்கான காரணங்களில் 32 சதவீதம் மாரடைப்பு உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், வாரத்தின் ஏழு நாள்களில் எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு வரலாம். ஆனால், வாரத்தின் தொடக்கமான திங்கள்கிழமைகளில்தான் மிக மோசமான மாரடைப்பு நேரிடுகிறது. எனவே, திங்கள்கிழமைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.