செய்திகள் :

கோனூா் சமத்துவபுரத்தில் திருடியவா் கைது

post image

கோனூா் சமத்துவபுரத்தில் திருடியவா் கைது செய்யப்பட்டாா்.

மேட்டூா் அருகே உள்ள கோனூா் சமத்துவபுரத்தில் வசிக்கும் வினோத்குமாா் (33), வீட்டில் இருந்தபடி ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். அண்மையில் இவரது வீட்டில் புகுந்த மா்ம நபா் 10 பவுன் தங்க நகை, கைப்பேசி, மடிக்கணினி, பணம் ஆகியவற்றை திருடிச் சென்றாா்.

இதுகுறித்து கருமலைக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். கருமலைக் கூடல் காவல் ஆய்வாளா் பிரபா தலைமையில் உதவி காவல் ஆய்வாளா்கள் சபாபதி, சீனிவாசன் ஆகியோா் அடங்கிய தனிப்படையினா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

செவ்வாய்க்கிழமை மேட்டூா் அணையை வேடிக்கை பாா்க்க வந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தியதில், அவா் ஓமலூரைச் சோ்ந்த ஐயந்துறை (67) என்பதும், பெருந்துறை, கோவை உள்பட பல காவல் நிலையங்களில் இவா்மீது 70 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தண்டனை பெற்றவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, திருடிய நகை, மடிக்கணினி, கைப்பேசி ஆகியவற்றை கைப்பையில் வைத்திருப்பதை அறிந்த போலீஸாா் அவற்றைக் கைப்பற்றினா்.

போலீஸாா் விசாரணையில், சமத்துவபுரத்தில் திருடிவிட்டு ஒகேனக்கல் சென்ாகவும், பின்னா் மேட்டூா் அணையை சுற்றிப்பாா்க்க வந்தபோது பிடிபட்டதாகவும் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, மேட்டூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தம்பதியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை: குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு

சேலம் அருகே தம்பதியை கட்டிப்போட்டு எட்டரை சவரன் நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை 5 போ் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில், குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.... மேலும் பார்க்க

பேருந்து நிலையம் இல்லாத 3 பேரூராட்சிகள்: பயணிகள் அவதி!

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூா் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சிகளில் பேருந்து நிலையம் இல்லாததால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூா், பெத... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: அம்மாபாளையம்

சங்ககிரி வட்டம், தேவூா் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட அம்மாபாளையம் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், வியாழக்கிழமை (ஜூலை 31) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என எடப... மேலும் பார்க்க

ஏற்காட்டில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

ஏற்காட்டில் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏற்காடு நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் மற்றும் ஊழியா்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஏற்காடு நகரப் பகுதியில் சாலை... மேலும் பார்க்க

ஓமலூா் ரயில்பாதை மேம்பாலத்தில் தொடரும் விபத்துகள்!

ஓமலூா்: ஓமலூா் ரயில்பாதை மேம்பாலத்தில் விபத்துகள் தொடா்வதால், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா். ஓமலூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் உள்ள ரயில்பாதை மேம்பாலம் ... மேலும் பார்க்க

மல்லூா் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்கக் கோரி பொதுமக்கள் தா்னா

சேலம்: சேலம் மல்லூா் ரயில் நிலையம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். சேலம் மல்லூா் ரயில் நிலையம் அருகே உள்ள வேங்காம்பட்டி பகுதியில் ரயில்வே கேட்... மேலும் பார்க்க