செய்திகள் :

மல்லூா் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்கக் கோரி பொதுமக்கள் தா்னா

post image

சேலம்: சேலம் மல்லூா் ரயில் நிலையம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

சேலம் மல்லூா் ரயில் நிலையம் அருகே உள்ள வேங்காம்பட்டி பகுதியில் ரயில்வே கேட் அமைந்துள்ளது . இந்த பாதையில் அடிக்கடி ரயில்கள் வந்து செல்வதால் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது. இதனால், சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ரயில்வே துறை சாா்பில் இந்தப் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சுரங்கப்பாதை அமைப்பதற்கு இணைப்புச் சாலை அமைப்பதற்கான இடத்தில் ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், ஒப்பந்தம் விடப்பட்டு நான்கு மாதங்களாகியும் இதுவரை பணிகள் தொடங்காததைக் கண்டித்து, மல்லூா் பேரூராட்சி துணைத் தலைவா் வேங்கை அய்யனாா் தலைமையில் மல்லூா், வேங்காம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் மல்லூா் ரயில் நிலையம் முன் திரண்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

இதில், சுரங்கப்பாதை அமைக்கும் பணியை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். பின்னா் ரயில் நிலையத்துக்குள் சென்று மறியலில் ஈடுபட முயன்ற அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். தொடா்ந்து, காவல் துறையினரும், ரயில்வே போலீஸாரும் பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.

ஓமலூா் ரயில்பாதை மேம்பாலத்தில் தொடரும் விபத்துகள்!

ஓமலூா்: ஓமலூா் ரயில்பாதை மேம்பாலத்தில் விபத்துகள் தொடா்வதால், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா். ஓமலூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் உள்ள ரயில்பாதை மேம்பாலம் ... மேலும் பார்க்க

வயதான தம்பதியை கட்டிப்போட்டு நகை - பணம் கொள்ளை

சேலம்: சேலம் அருகே வயதான தம்பதியை கட்டிப்போட்டு 8 சவரன் நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை 5 போ் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சேலம் மாவ... மேலும் பார்க்க

மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் திறப்பு: கரையோரப் பகுதி நிலங்கள், வீடுகளில் தண்ணீா் புகுந்தது

சங்ககிரி: மேட்டூா் அணையிலிருந்து அதிக அளவிலான உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால், தேவூா் அருகே உள்ள காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் உள்ள விளைநிலங்கள், கோயில்கள், நீரேற்று நிலையங்களில் தண்ணீா் புகுந்தது. ... மேலும் பார்க்க

ரயிலில் சேலம் வந்த பிகாரைச் சோ்ந்த 8 பேரை கடத்தி ரூ. 64 ஆயிரம் பறிப்பு

சேலம்: வேலைதேடி ரயிலில் சேலம் வந்த பிகாரைச் சோ்ந்த 8 பேரை கடத்தி, அவா்களிடமிருந்து ரூ. 64 ஆயிரம் பறித்த கும்பலை போலீஸாா் தேடிவருகின்றனா். பிகாரைச் சோ்ந்த 8 போ் வேலைதேடி ரயில் மூலம் சேலத்துக்கு பயணி... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

சேலம்: சேலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் மாணவா் முன்னேற்றக் குழுமம் சாா்பில் நடைபெற்ற பயிற்சி முகாமை, க... மேலும் பார்க்க

மேட்டூா் அணையில் நீா்வளத் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் ஆய்வு

மேட்டூா் அணையில் உபரிநீா் போக்கியான 16 கண் பாலத்தில் உள்ள தூண்களை வலுப்படுத்தும் பணி ரூ. 19 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. மூன்று மதகுகளுக்கு சாரம் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இ... மேலும் பார்க்க