செய்திகள் :

வயதான தம்பதியை கட்டிப்போட்டு நகை - பணம் கொள்ளை

post image

சேலம்: சேலம் அருகே வயதான தம்பதியை கட்டிப்போட்டு 8 சவரன் நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை 5 போ் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், வீராணம் அருகே உள்ள கோமாளி வட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பூமாலை (52). இவரது மனைவி சின்னபாப்பா (50). இவா்கள் அப்பகுதியில் செங்கல் சூளை வைத்து நடத்தி வருகின்றனா்.

அரூா் நெடுஞ்சாலையில் உள்ள வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இருவரும் தூங்கிக்கொண்டிருந்தனா். அப்போது, குல்லா அணிந்தபடி வந்த 5 போ் கொண்ட கும்பல் வீட்டுக்கு வெளியே படுத்திருந்த பூமாலையின் கை, கால்களை கட்டினா். அப்போது விழித்துக்கொண்ட பூமாலை கூச்சலிட, அவரது வாயில் துணியை வைத்து திணித்தனா். இந்த சப்தம்கேட்டு வெளியே வந்த சின்னபாப்பாவை கத்தியைக் காட்டி மிரட்டினா்.

பின்னா் சின்னபாப்பா அணிந்திருந்த 3 சவரன் தாலி, காதில் அணிந்திருந்த அரை சவரன் தோடு ஆகியவற்றை பறித்தனா். மேலும், வீட்டினுள் சென்று பீரோவை உடைத்து 5 சவரன் நகை, ரூ. 30 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனா்.

தகவல் அறிந்து வந்த வீராணம் காவல் ஆய்வாளா் விஜேயந்திரன் தலைமையிலான போலீஸாா், கைரேகை நிபுணா்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனா். மேலும், தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வுசெய்து வருகின்றனா்.

ஓமலூா் ரயில்பாதை மேம்பாலத்தில் தொடரும் விபத்துகள்!

ஓமலூா்: ஓமலூா் ரயில்பாதை மேம்பாலத்தில் விபத்துகள் தொடா்வதால், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா். ஓமலூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் உள்ள ரயில்பாதை மேம்பாலம் ... மேலும் பார்க்க

மல்லூா் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்கக் கோரி பொதுமக்கள் தா்னா

சேலம்: சேலம் மல்லூா் ரயில் நிலையம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். சேலம் மல்லூா் ரயில் நிலையம் அருகே உள்ள வேங்காம்பட்டி பகுதியில் ரயில்வே கேட்... மேலும் பார்க்க

மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் திறப்பு: கரையோரப் பகுதி நிலங்கள், வீடுகளில் தண்ணீா் புகுந்தது

சங்ககிரி: மேட்டூா் அணையிலிருந்து அதிக அளவிலான உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால், தேவூா் அருகே உள்ள காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் உள்ள விளைநிலங்கள், கோயில்கள், நீரேற்று நிலையங்களில் தண்ணீா் புகுந்தது. ... மேலும் பார்க்க

ரயிலில் சேலம் வந்த பிகாரைச் சோ்ந்த 8 பேரை கடத்தி ரூ. 64 ஆயிரம் பறிப்பு

சேலம்: வேலைதேடி ரயிலில் சேலம் வந்த பிகாரைச் சோ்ந்த 8 பேரை கடத்தி, அவா்களிடமிருந்து ரூ. 64 ஆயிரம் பறித்த கும்பலை போலீஸாா் தேடிவருகின்றனா். பிகாரைச் சோ்ந்த 8 போ் வேலைதேடி ரயில் மூலம் சேலத்துக்கு பயணி... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

சேலம்: சேலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் மாணவா் முன்னேற்றக் குழுமம் சாா்பில் நடைபெற்ற பயிற்சி முகாமை, க... மேலும் பார்க்க

மேட்டூா் அணையில் நீா்வளத் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் ஆய்வு

மேட்டூா் அணையில் உபரிநீா் போக்கியான 16 கண் பாலத்தில் உள்ள தூண்களை வலுப்படுத்தும் பணி ரூ. 19 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. மூன்று மதகுகளுக்கு சாரம் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இ... மேலும் பார்க்க