செய்திகள் :

`மக்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் தான்..!’ - OTP விவகாரத்தில் திமுக மேல்முறையீடு

post image

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை அணுகும் வகையில் `ஓரணியில் தமிழ்நாடு' என்னும் பெயரில் திமுக உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வந்தது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களிடமிருந்து ஆதார் மற்றும் அதன் ஒடிபி எண் ஆகியவற்றை பெற்று வந்தனர்.

இதற்கு எதிராக திருபுவனத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ராஜ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபகள் அமர்வு, `திமுக ஓடிபி பெறும்   விவகாரம் தனிநபரின் பாதுகாப்பு விஷயங்களில் பிரச்னை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கிறது. உறுப்பினர் சேர்க்கைக்கும் ஓடிபி பெறுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?’ உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன் ஓடிபி பெற இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை என்ற உத்தரவுக்கு எதிராக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரிவாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், `ஓடிபி பெறும் விஷயத்தில் பொதுமக்களிடம் எந்த வற்புறுத்தலையும் தங்கள் கட்சியினர் மேற்கொள்ளவில்லை. எதற்காக ஓடிபி பெறப்படுகின்றது அதை என்ன செய்யவிருக்கிறோம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பொதுமக்களிடம் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.

மேலும் தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தான் மக்கள் தானாகவே இந்த உறுப்பினர் சேர்க்கையில் கலந்து கொண்டு வருகின்றனர். ஆனால் இது எதையும் ஆராயாமல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. எனவே இந்த தடை உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என திமுக அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`மாறுவேடத்தில் மத்திய அரசு; குடியரசுத் தலைவருக்கே அனுப்புங்க’ - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு

தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பர்திவாலா மற்று... மேலும் பார்க்க

தொடர்ந்து அதிகரிக்கும் நாய்க்கடி சம்பவங்கள்... தாமாக முன்வந்து கையிலெடுத்த உச்ச நீதிமன்றம்!

குழந்தைகள் முதல் வயதானவர்கள் பலரும் தெருநாய்க்கடி சம்பவங்களால் பாதிக்கப்படுவதும், சில சமயங்களில் உயிரிழப்பதும் அனைத்து மாநிலங்களிலும் பெரும் பிரச்னையாக இருக்கிறது.இந்த நிலையில், தெருநாய்க்கடி விவகாரத்... மேலும் பார்க்க

மா.சுப்பிரமணியன் மீதான வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் முடிவா?

கடந்த 1995 ஆம் ஆண்டு சிட்கோ திட்டத்தின் கீழ் அதில் பணிபுரிந்த தொழிலாளியான கர்ணன் என்பவருக்கு அரசு தொழிலாளர்களுக்கான இடத்தை தமிழ்நாடு அரசு ஒதுக்கியிருந்தது.அரசு ஊழியருக்கு ஒதுக்கும் இடத்தை வேறு யாருக்க... மேலும் பார்க்க

`அவர் மீதான வழக்கில் அவரே நீதிபதியாக இருப்பதை எவ்வாறு அனுமதிப்பது?' - மேனாள் நீதியரசர் அரி பரந்தாமன்

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட், மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடி வருபவர். பயிற்சி பெற்ற அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பணி, திருப்பரங்குன்றம் மலை விவ... மேலும் பார்க்க

7 ஆண்டுகள் சிறை தண்டனை (அ) ஆயுள் தண்டனை... ஆப்ஷன் கொடுத்த உச்ச நீதிமன்றம் - ஒரு சுவாரஸ்ய வழக்கு!

நீதி தாமதமாக நிலைநாட்டப்படும் வழக்குகளை பார்த்திருப்போம். அப்படிப்பட்ட ஒரு கவனிக்கத்தக்க வழக்கில் கல்லூரி படிக்கும்போது செய்த குற்றத்துக்காக குற்றவாளிக்கு 67 வயதில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதி... மேலும் பார்க்க

Haryana: பாலியல் வழக்கில் சிறைக்கு சென்ற எம்.பி மகனுக்கு `துணை அட்வகேட் ஜெனரல்' பதவி

ஹரியானாவில் பாஜக எம்.பி சுபாஷ் பரலாவின் மகன் விகாஷ் பரலாவை அம்மாநில அரசு துணை அட்வகேட் ஜெனரலாக நியமித்திருக்கிறது. இந்த விகாஷ் பரலா, காரில் பெண் ஒருவரை துரத்திச் சென்று தொந்தரவு செய்த விவகாரத்தில் பால... மேலும் பார்க்க