செய்திகள் :

போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறியது வெட்கக்கேடு: ஆ. இராசா

post image

போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறியது வெட்கக்கேடு என மக்களவையில் திமுக எம்.பி. ஆ. இராசா பேசியுள்ளார்.

மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் திமுக எம்.பி. ஆ. இராசா பேசுகையில்,

"திமுக என்பது தேச ஒற்றுமைக்கான கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், எங்களை தேச விரோதிபோல சித்தரிக்க முயற்சி நடக்கிறது.

பாஜகவினர் எப்போது பார்த்தாலும் நேரு, இந்திரா காந்தி மீதுதான் தவறு என பழி போடுகின்றனர். அவர்கள் மீது பழிபோடுவதுதான் பாஜகவினருக்கு வாடிக்கை. கடந்த கால ஆட்சிகளை ஒப்பிட்டு மட்டுமே பேசுகின்றனர். நேருவைப் போல ஒரு பிரதமர் யாரும் இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது.

பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்று கூறிவிட்டால் சரியாகிவிடுமா? பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன?

விதி 370 பிரிவைக் கொண்டு வந்த பிறகு காஷ்மீரில் சண்டை இருக்காது, துப்பாக்கிச் சத்தம் இருக்காது என்றெல்லாம் கூறினார்கள். பஹல்காம் தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வியே காரணம்.

தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த நாடுகள் ஒன்றுகூட பாகிஸ்தானுக்கு எதிராக பேசவில்லை.

போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறுகிறார், ஆனால் மத்திய அரசு அதை மறுக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் கூறியது வெட்கக்கேடு. ஒரு இந்திய குடிமகனாக வெட்கப்படுகிறேன்.

தாக்குதல் தொடர்பாக அமைச்சர்கள் பேசியதில் பல குழப்பங்கள் இருக்கின்றன. நாட்டை ஆளும் தகுதி பாஜகவுக்கு இல்லை.

அமெரிக்க துணை அதிபர், இந்தியப் பிரதமரை அழைத்து, பாகிஸ்தான் தாக்குதல் நடக்கப்போவதாகக் கூறுகிறார். இது உங்களுக்கு வெட்கம் இல்லையா?

கார்கில் போரின்போது வாஜ்பாய் ஒரு விசாரணைக்குழுவை அமைத்து அறிக்கையை நாடளுமன்றத்தில் வழங்கினார். குறைந்தபட்சம் உங்கள் தலைவர் வாஜ்பாயின் வழிமுறைகளையாவது பின்பற்றுங்கள். பஹல்காம் தாக்குதல் நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது.

தாக்குதல் முடிந்துவிட்டதாக ஒரு அமைச்சரும் தாக்குதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஒரு அமைச்சரும் கூறுகிறார். இதில் எது உண்மை?" என்று பேசியுள்ளார்.

DMK MP A. Raja speech in the debate on Operation Sindoor in the Lok Sabha

இதையும் படிக்க | நேருவை குறை சொல்லாதீர்கள்; மோடி என்ன கற்றுக்கொண்டார்? - கனிமொழி

12,000 பேரை பணி நீக்குவதாக டிசிஎஸ் அறிவிப்பு: நிலைமை கவனித்து வருவதாக மத்திய அரசு தகவல்

நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் 12,000-க்கும் மேற்பட்டோரை பணியில் இருந்து நீக்க இருப்பதாக அறிவித்துள்ளது ஊழியா்கள் மத்தியில் பெரும் அச்சத்த... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: குற்றப் பத்திரிகையை கவனத்தில் கொள்வதற்கான தீா்ப்பு ஒத்திவைப்பு

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத் துறையின் குற்றப் பத்திரிகையை கவனத்தில் எடுத்துக்கொள்வதா, வேண்டாமா என்பது தொடா்பான தீா்ப்பை தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை வெளியிடும் ஏஜேஎ... மேலும் பார்க்க

காா்கேயை விமா்சித்ததற்கு மன்னிப்பு கோரினாா் ஜெ.பி.நட்டா

‘ஆபரேஷன் சிந்தூா்’ மீதான சிறப்பு விவாதத்தின்போது மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவரான மல்லிகாா்ஜுன காா்கேயை விமா்சித்து ஆட்சேபத்துக்குரிய கருத்து தெரிவித்ததற்கு மன்னிப்பு கோருவதாக மத்திய சுகாதாரத் துறை ... மேலும் பார்க்க

6 உயா்நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை

தில்லி, மும்பை உள்ளிட்ட 6 உயா்நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், நீதிபதிகள் சூா்ய காந்த், விக்ரம் நாத், இடம... மேலும் பார்க்க

அதிக வாக்காளா்கள் நீக்கப்பட்டால் தலையிடுவோம்: உச்சநீதிமன்றம் பிகாா் சிறப்பு தீவிர திருத்த விவகாரம்

‘அரசமைப்பு நிறுவனமான தோ்தல் ஆணையத்துக்கு சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமை உள்ளது. ஆனால், பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் கீழ் அதிக எண்ணிக்கையில் வாக்காளா்... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: துப்பாக்கிச்சூட்டில் ஒரு நக்ஸல் கொலை- பாதுகாப்புப் படையினா் மூவா் காயம்

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்ஸல்களுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒரு நக்ஸல் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்... மேலும் பார்க்க