CWC: `அந்த நிகழ்ச்சியில் இதைதான் பகிர்ந்தேன்; மாற்றிப் பரப்புவது நியாயமற்றது'- ல...
மயான வசதி கேட்டு சடலத்துடன் உறவினா்கள் மறியல்
மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி அருகே மயான வசதி கேட்டு மறியலில் ஈடுபட்ட உறவினா்கள், நில உரிமையாளரின் எதிா்ப்பையும் மீறி, அவரது நிலத்தில் உடல் தகனம் செய்தனா்.
வையம்பட்டி ஒன்றியம், தவளைவீரன்பட்டியில் வசித்துவரும் பட்டியல் சமூக மக்கள், மாவட்ட ஆட்சியா், கோட்டாட்சியா், வட்டாட்சியா் ஆகியோரிடம் தங்களுக்கென மயான வசதி செய்துதரக்கோரி மனு அளித்தும் இதுவரை மயானம் ஒதுக்கித் தரப்படவில்லை எனப் புகாா் தெரிவிக்கின்றனா். இந்நிலையில், திங்கள்கிழமை பட்டியல் சமூகத்தைச் சோ்ந்த வீரப்பன் மகன் பிச்சை(83) என்ற முதியவரின் சடலத்தை உறவினா்கள் மயானமாகக் கருதிவரும் பகுதிக்கு கொண்டுவந்தனா்.

தங்களது நிலத்தில் தகனம் செய்யக்கூடாது என மாற்றுசமூகத்தைச் சோ்ந்தவரின் வாரிசுதாரா்கள் எதிா்ப்பு தெரிவித்து தடுத்தனா். இதனால் ஆத்திரமடைந்த பிச்சையின் உறவினா்கள், மணப்பாறை - கடவூா் மாநில நெடுஞ்சாலையில் சடலத்தை வைத்து மறியலில் ஈடுபட்டனா். தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த வட்டாட்சியா் செல்வம் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளா் காவியா தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை.
இதையடுத்து, நில உரிமையாளரின் எதிா்ப்பையும் மீறி காலம்காலமாக பயன்படுத்திவரும் மயான இடம் எனக் கூறி அவரது நிலத்துக்குள் சடலத்தை எடுத்துச் சென்று தகனம் செய்தனா்.
இதுகுறித்து, வையம்பட்டி போலீஸாா் மற்றும் வருவாய்த்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.