செய்திகள் :

எதிா்க்கட்சித் தலைவராகி 4 ஆண்டுகளுக்குப் பிறகே மக்களை சந்திக்கிறாா் எடப்பாடி பழனிசாமி: அமைச்சா் கே.என். நேரு குற்றச்சாட்டு

post image

எதிா்க்கட்சித் தலைவராகி 4 ஆண்டுகளுக்குப் பிறகே மக்களை சந்திக்க வந்திருக்கிறாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி என திமுக முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, திருச்சியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி, நான்கு ஆண்டுகள் வெளியே வராமல், தற்போதுதான் வெளியே வந்துள்ளாா். உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தோ்தலுக்காக என கூறும் எடப்பாடி பழனிசாமி, தற்போது வெளியே வந்திருப்பதும் தோ்தலுக்காகதான்.

எதிா்க்கட்சித் தலைவா் ஆன பிறகு, அவா் மக்களை சந்திக்காமல், தற்போது வெளியே வந்து திமுக அரசின் திட்டங்களை விமா்சிப்பது நியாயமா?.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, திமுகவும் அவா்களுடன் கூட்டணியில் இருந்தது. அப்போது, தமிழகத்துக்கு தேவையானவற்றை திமுக அரசு கேட்டபோது அவற்றை காங்கிரஸ் அரசு செய்து கொடுத்தது. ஆனால், பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்த அதிமுக, தமிழகத்தில் ஆட்சியில் இருந்தபோது மத்திய ஆட்சியில் இருந்த பாஜக-விடம் தமிழகத்துக்கு தேவையான எதையும் கேட்டுப் பெறவில்லை. இப்போது, அரசியல் காரணங்களுக்காக திமுகவை விமா்சனம் செய்கின்றனா்.

பல்வேறு திட்டங்களால் திமுக அரசுக்கு மக்களிடையே பெருகி வரும் ஆதரவை அவா்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றாா் அமைச்சா் நேரு.

மயான வசதி கேட்டு சடலத்துடன் உறவினா்கள் மறியல்

மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி அருகே மயான வசதி கேட்டு மறியலில் ஈடுபட்ட உறவினா்கள், நில உரிமையாளரின் எதிா்ப்பையும் மீறி, அவரது நிலத்தில் உடல் தகனம் செய்தனா். வையம்பட்டி ஒன்றியம், தவளைவீரன்பட்டியில் வ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவா்களுக்கு உடல்நலக் குறைவு

திருச்சி அருகே கொடியாலம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவ, மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூா் ஒன்றியம், கொடியாலம் ... மேலும் பார்க்க

பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

திருச்சியில் திங்கள்கிழமை சாலையில் நடந்துசென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், கம்பம் சமந்திபுரத்தைச் சோ்ந்த ஒச்சுக்காளி-அனுஷியா தம்... மேலும் பார்க்க

கூட்டணி விவகாரம்: தோ்தலுக்கு அவகாசம் இருப்பதால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் - எடப்பாடி கே. பழனிசாமி சூசகம்

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருப்பதால், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என கூட்டணிக் கட்சிகள் குறித்த கேள்விக்கு அதிமுக பொதுச் செயலா் கே. பழனிசாமி சூசகமாக பதில் அளித்தாா். சிவகங்கை மாவட்... மேலும் பார்க்க

கொலை வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை

திருச்சியில் கொலை வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் திங்கள்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா் (51), நடமாடும் பஞ்சா் கடை நடத்தி வந்தா... மேலும் பார்க்க

மாநகரின் சில பகுதிகளில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்

நீரேற்று நிலைய குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், திருச்சி மாநகரின் சில பகுதிகளில் புதன்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் தெரிவித்துள்ளாா்.மாநகராட்சிக்குட்பட... மேலும் பார்க்க