செய்திகள் :

Dhoni: "கணவர் கோபமாக இருக்கும்போது எதுவும் பேசாதீர்கள்" - ரிலேஷன்ஷிப் ஜோக் அடித்த தோனி!

post image

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி ஒரு கூலான கேப்டன் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் ஒரு ஜாலியான மனிதரும் கூட என்பதை நெருக்கமாக பின்தொடரும் ரசிகர்கள் மட்டுமே அறிவர்.

சமீபத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்துகொண்ட தோனி, மணமகனுக்கு நகைச்சுவையான ஆலோசனையை வழங்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Dhoni, Sakshi Dhoni

Dhoni-ன் நகைச்சுவைத் துணுக்குகள்

"திருமணம் ரொம்ப நல்ல விஷயம். நீங்க ரொம்ப சீக்கிரமா அத பண்ணிக்கிறீங்க. சிலருக்கு நெருப்போட விளையாட பிடிக்கும், மாப்பிள்ளை அப்படிப்பட்ட ஆள்போல" என ஜோக்கடித்து அனைவரையும் மகிழ்வித்துள்ளார்.

"இப்போது உத்கர்ஷுக்கும் (மாப்பிள்ளை) இந்த மாயை இருக்கும். எல்லா கணவர்களும் ஒரே படகில் தான் பயணிக்கிறோம். நீங்கள் உலகக் கோப்பை வென்றிருக்கிறீகளா இல்லையா என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல" என தனது மண வாழ்க்கையைப் பற்றியும் சில வார்த்தைகளை உதிர்த்தார்.

மணமகளுக்கு ஆலோசனை கூறும் விதமாக, "உங்கள் கணவர் கோபமாக இருக்கும்போது அவரிடம் எதுவும் பேசாமல் இருங்கள். நாங்கள் 5 நிமிடங்களில் கூல் டவுன் ஆகிவிடுவோம். எங்களால் எவ்வளவு நேரம் தாக்குபிடிக்க முடியும் என எங்களுக்குத் தெரியும்" என்றார்.

ஃபினிஷிங் டச்சாக, "இந்த ஜோக்குகளுக்கு ஏன் ஆண்கள் அதிகமாக சிரிக்கிறார்கள் எனத் தெரியவில்லை" எனக் கூறி சிரித்தபடி, மணமக்களை வாழ்த்தி வெளியேறினார்.

அவர் இறங்கும்போது விழாவிலிருந்த அனைவரும் தோனி தோனி என ஆர்ப்பரித்தனர்!

Tsunami: 12 வருடங்களுக்கு முன்பே கணித்தாரா ஜப்பானிய கலைஞர்? - `July5Disaster' வைரலாக காரணம் என்ன?

ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தில் நேற்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 8.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் கம்சாத்கா தீபகற்பத்தில் கட்டிடங்கள் குலுங்கின. ஜப்பானின் ஹொக்கைடோ தீவி... மேலும் பார்க்க

Masturbation: ``சுய இன்பத்திற்காக தினம் 30 நிமிட இடைவெளி'' - ஸ்வீடன் நிறுவனம் முடிவு; காரணம் என்ன?

ஸ்வீடனைச் சேர்ந்த எரிகா லஸ்ட் பிலிம்ஸ் என்ற நிறுவனம், தனது ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக ஒரு தனித்துவமான விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம், தினமும் 30 நிமிடங்கள் ஊழியர்களுக்கு ச... மேலும் பார்க்க

ஒரு வயது குழந்தை கடித்து உயிரிழந்த நாகப்பாம்பு... பீகாரில் நடந்த வினோதம்

பீகாரில் ஒரு வயது குழந்தை கடித்து நாகப்பாம்பு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தச் சம்பவமானது மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் நடந்திருக்கிறது.அந்தக் குழந்தையை குடும்பத்தினர் பெட்டியா ந... மேலும் பார்க்க

``வீட்டில் உணவு சமைக்க தினமும் 1,150 ரூபாய்'' கணவரிடம் வசூலிக்கும் மனைவி - கூறும் காரணம் என்ன?

இரண்டு குழந்தைகளின் தாயான ரே என்பவர் தனது கணவருக்கு தயாரிக்கும் மதிய உணவுக்காக தினமும் £ 10 (1,150 ரூபாய்) வசூலிப்பதாக டிக் டாக்கில் அவர் பகிர்ந்து இருக்கிறார். வீட்டில் தயாரிக்கப்படும் உணவிற்கும் ஊதி... மேலும் பார்க்க

``பத்மஸ்ரீ விருதை பாதுகாப்பாக வைக்க கூட இடம் இல்லை'' - ஒழுகும் கூரை, வறுமையில் வாடும் துக்கு மாஜ்ஹி

2024-ம் ஆண்டு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டவர்களில் கவனிக்கத்தக்கவர் துக்கு மாஜ்ஹி. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இவர், ஒவ்வொரு நாளும் தனது மிதிவண்டியில் புதிய இடங்களுக்குச் சென்று, தரிசு நிலத்தில்5,000-க்க... மேலும் பார்க்க

MS Dhoni: `44 வயதிலும் எப்படி புத்துணர்ச்சியுடன்..?' - எம்.எஸ் தோனி அளித்த பதில்

இந்திய கிரிக்கெட் வீரார் எம்.எஸ் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் இருப்பதைப் போல, 44 வயதைக் கடந்து, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றப் பிறகும் அதே உற்சாகத்துடனும், புத்துணர்ச்சியு... மேலும் பார்க்க