செய்திகள் :

நீட் தேர்வில் ஒரே குடும்பத்தில் தாயும் மகளும் தேர்ச்சி! இருவருக்கும் எம்பிபிஎஸ் சீட்!

post image

சென்னை: நீட் தேர்வு எழுதிய தாயும் மகளும் தேர்ச்சியடைந்துள்ளதால் இருவருக்கும் எம்பிபிஎஸ் பயில இடம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 49 வயதைக் கடந்துவிட்ட மாற்றுத்திறனாளியான அமுதவள்ளி மணிவண்ணன் தனது விடாமுயற்சியால் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, இன்று(ஜூலை 30) தொடங்கிய மருத்துவ இளங்கலை படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்று அதில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் பிடித்துள்ளார்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த அமுதவள்ளிக்கு அன்றைய காலகட்டத்தில் மருத்துவப் படிப்பு பயில வாய்ப்பு கிட்டாமல் போனது. ஆனால் இப்போது, நீட் தேர்வில் உச்சப்பட்ச வயது என்னும் வரையறை நிர்ணயிக்கப்படாததால் தமது நெடுங்கால கனவு நிறைவேறியுள்ளதாக அமுதவள்ளி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். பிசியோதெரபிஸ்ட் படிப்பு பயின்று சேவையாற்றி வந்த அமுதவள்ளி, நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.

அவருடைய மகளான எம். சம்யுக்தா தொடர்ந்து நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்ததைப் பார்த்த அவரது தாயாருக்கும் மருத்துவராக வேண்டுமென்ற தமது சிறு வயது ஆசை மீண்டும் துளிர்விட்டது. அதன் விளைவு, மகளுடன் தாயும் சேர்ந்து நீட் தேர்வுக்கு படித்து தேர்ச்சியடைந்துள்ளனர். சம்யுக்தா பொதுப்பிரிவு கலந்தாய்வில் விரைவில் கலந்து கொள்கிறார்.

தென்காசியிலுள்ள ஒரு குடும்பத்தில் ஒரே வீட்டில் இனி இரு டாக்டர்கள் என்பதால் மகிழ்ச்சியில் தத்தளிக்கிறார்கள் குடும்பத்தினர்! நீட் தேர்வில் தேர்ச்சியடைந்த அமுதவள்ளி மணிவண்ணனுக்கு பாராட்டு குவிகிறது.

NEET, Amuthavalli Manivannan, 49-year-old mother of a girl who is also aspiring to become a doctor, secured an MBBS seat

சென்னையில் 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள்

சென்னை மாநகராட்சியில் 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள் அமைக்க மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.பெருநகர சென்னை மாநகராட்சியின் ஜூலை மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் ரிப்பன் ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் கொலை வழக்கு: திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது

சென்னை அண்ணா நகரில் காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் சு.நிதின் சாய் (19)... மேலும் பார்க்க

இரிடியம் தொழிலில் முதலீடு செய்யும்படி ரூ.92 லட்சம் மோசடி: வடமாநில நபா் கைது

சென்னையில் இரிடியும் தொழிலில் முதலீடு செய்யும்படி தொழிலதிபரிடம் ரூ.92 லட்சம் மோசடி செய்ததாக மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா்.மடிப்பாக்கம், ஆா்.ஆா்.நகா் பகுதியைச் சோ்ந்தவா் தட்சிணாமூா... மேலும் பார்க்க

மின் வாகனங்களுக்கான மின்னேற்றம் புதிய வடிவமைப்பு: சென்னை ஐஐடி-யில் உருவாக்கம்

மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றத்தில் பல்வேறு அம்சங்களுடன் கூடிய புதிதாக வடிவமைக்கப்பட்ட மின்னேற்றத்தை சென்னை ஐஐடியால் நிறுவப்பட்ட பிளக்ஸ்மாா்ட் நிறுவனம் உருவாக்கியுள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

மேம்பால கட்டுமானப் பணி மத்திய கைலாஷ் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

மேம்பால கட்டுமானப் பணி காரணமாக, மத்திய கைலாஷ் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஆக. 1) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு புதன்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: இன்று நடைபெறும் வாா்டுகள்

சென்னை மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்கள் நடைபெறும் 5 வாா்டுகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:சென்னை ... மேலும் பார்க்க