செய்திகள் :

மத்திய வெளியுறவுத் துறை செயலாளரை சந்தித்த நேபாள எம்.பிகள்!

post image

தில்லியில் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை, நேபாளத்தின் அனைத்துக் கட்சிக் குழுவினர் நேரில் சந்தித்துள்ளனர்.

நேபாளத்தின் அனைத்துக் கட்சிக் குழுவிலான, அந்நாட்டின் எம்.பிகள் இந்தியா வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, தலைநகர் தில்லியில் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை அவர்கள் இன்று (ஜூலை 30) நேரில் சந்தித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பில், இருநாடுகளுக்கு இடையிலான பன்முகத் துறைகளின் வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேபாள அனைத்துக் கட்சிக் குழுவுடனான, இந்தச் சந்திப்பானது அந்நாட்டின் பிரதமர் சர்மா ஒலியின் இந்தியப் பயணத்துக்கு முன்னதாக அமைந்துள்ளது.

கடந்த, ஜூலை 27 ஆம் தேதியன்று, நேபாள வெளியுறவுத் துறை அமைச்சகம், பிரதமர் ஒலி, வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வார் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மக்களவையில் எதிரொலித்த வயநாடு விவகாரம்: சீரமைப்பில் மத்திய அரசு மெத்தனப்போக்கு! -பிரியங்கா

An all-party delegation from Nepal met Union Foreign Secretary Vikram Misri in person in Delhi.

‘மாலேகன் குண்டுவெடிப்பு: என்ஐஏ - ஏடிஎஸ் விசாரணையில் முரண்பாடு’

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்பு காவல் பிரிவு (ஏடிஎஸ்) ஆகிய இரு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில் உள்ள முரண்பாடுகளை மும்பை சிறப்பு ந... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமனம்: கேரள ஆளுநா் - முதல்வா் இடையே மீண்டும் மோதல்

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரத்தில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் ஆடு வளா்ப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

தெலங்கானாவில் செம்மறி ஆடு வளா்ப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, இதற்கு பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேற பாகிஸ்தானுக்கு தொடா் வலியுறுத்தல்: மத்திய அரசு

ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களிலும் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளைவிட்டு உடனடியாக வெளியேற பாகிஸ்தானை இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது என மத்திய அரசு வெள்ளிக்கி... மேலும் பார்க்க

சுதந்திர தின உரை: மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமா்

தொடா்ந்து 12-ஆவது முறையாக சுதந்திர தின உரையாற்ற உள்ள நிலையில், தனது பேச்சில் இடம்பெற வேண்டிய கருத்துகள் குறித்து ஆலோசனைகளை அனுப்புமாறு பொதுமக்களை பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா்.நாட்டின் சு... மேலும் பார்க்க

பணம் ஈட்டும் விளையாட்டுகள்: சிசிஐயிடம் கூகுள் முன்மொழிவு

இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோரில் பணம் ஈட்டும் விளையாட்டுகளை அனுமதிக்க இந்திய தொழில் போட்டி ஆணையத்திடம் (சிசிஐ) கூகுள் நிறுவனம் முன்மொழிந்துள்ளது.இதுதவிர, இந்தியாவில் கூகுள் விளம்பர கொள்கையில் மாற்றங்க... மேலும் பார்க்க